search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sreedharan Pillai"

    சபரிமலைக்கு பெண் போலீஸ் மட்டுமல்ல பெண் போலீஸ் அதிகாரிகளே வந்தாலும் அவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று பா.ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறினார். #Sabarimala #BJP
    திருவனந்தபுரம்:

    பா.ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலையில் காலம் காலமாக நடைமுறையில் உள்ள ஆச்சாரங்களை கம்யூனிஸ்டு அரசு மாற்றி அமைக்க நினைக்கிறது. அங்கு பெண்களை அனுமதிக்க முயற்சி செய்கிறது. சபரிமலை ஒன்றும் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகம் கிடையாது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்ககூடாது.

    வருகிற 17-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதையொட்டி அங்கு பெண் போலீசாரை பாதுகாப்புக்கு நியமிக்க கம்யூனிஸ்டு அரசு முயற்சி செய்து வருகிறது. பெண் போலீஸ் மட்டுமல்ல பெண் போலீஸ் அதிகாரிகளே வந்தாலும் அவர்களை சபரிமலையில் அனுமதிக்க மாட்டோம். பெண் போலீசாரை பம்பையிலேயே தடுத்து நிறுத்துவோம்.

    இதற்காக எதையும் சந்திக்க பா.ஜனதா தயாராக உள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala #BJP
    ×