search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "S.P.Shanmuganathan"

    • சிவத்தையாபுரத்தில் ஆனந்த விநாயகர் கிளப் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தும் 3 நாட்கள் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நடக்கிறது.
    • அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி- சென்னை வைஷ்ணவா கல்லூரிகளுக்கு இடையான போட்டியினை தொடங்கி வைத்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே சிவத்தையாபுரத்தில் ஆனந்த விநாயகர் கிளப் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தும் 3 நாட்கள் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியின் 2-வது நாளன்று சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி- சென்னை வைஷ்ணவா கல்லூரிகளுக்கு இடையான போட்டியினை தொடங்கி வைத்தார். சிவத்தையாபுரம் முத்துமாலையம்மன் பள்ளிகள் கல்விக்குழு தலைவர் பரமசிவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் சுதர்சன் ராஜா, சாயர்புரம் நகர செயலாளர் துரைசாமி ராஜா,சிவத்தையாபுரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பால்ராஜ், துணைத்தலைவர் சரவணகுமார் ராஜூ, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், பவுன்சிங், அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் பாண்டியன், பார்த்திபன், செல்வ குரு, எட்வர்ட், பட்டுராஜ் மற்றும் ஊர் பிரமுகர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    ×