search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special pmla court"

    வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. #VijayMallya #SpecialPMLACourt
    புதுடெல்லி:

    தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இது தொடர்பாக அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், அவரை நாடுகடத்தவும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு அந்நாட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே புதிதாக கொண்டுவரப்பட்ட ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ், விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, மும்பையில் உள்ள பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. 

    இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டுச் சென்ற மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்தார். பொருளாதார குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கவும் மறுத்துவிட்டார். #VijayMallya #SpecialPMLACourt
    ×