என் மலர்
நீங்கள் தேடியது "Special Aritcle"
- இந்த வருடம் கென்டக்கி டெர்பி எனப்படும் அமெரிக்க குதிரை ரேசில் இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது!
- ஆம் ஸ்பெக்டிரா என்பது முதல் நாலு குதிரைகளின் பெயரையும் அவற்றின் சரியான வரிசையையும் முன்பே கணித்தல்.
"பொறப்பட்டுட்டாரும்மா!"
"காருக்கு வந்துட்டாரு!"
"என் தகவல்படி ரெண்டு காரு ஒரே சமயம் புறப்பட்டு ஒரே திசையில போவுதுங்கம்மா!"
"ரெண்டு காரும் போற திசை மந்தவெளி இல்லம்மா! அபிராமபுரம்!"
நீங்கள் வீட்டு காலிங் பெல் அடிக்கும் முன்பே கதவு திறக்கப்பட்டு கேள்வி தெறிக்கும்.
"ஏன் லேட்டு!"
"லேட்டா? நேரா ஆபீஸ்லேர்ந்து வரேன்! என்ன டிராபிக்குங்கற!"
"எங்க அபிராமபுரத்துலயா?"
"என்..என்னது! அபிராமபுரமா? நான்..!"
"புளுகாதீங்க! அந்த லாவண்யாவ நோகாம எஸ்கார்ட் பண்ணி வீட்ல கொண்டு விட்டுட்டு வர்ரீங்க!"
"இல்ல வைஷு! நா வந்து…!"
"ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் புரோகிராம் வந்ததாலதான் உங்க தகிடு தத்தமெல்லாம் தெரியுது!
அட என்னங்க இது கொறக்களி வித்தையா இருக்கு!
ஆம். இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு என்னும் இயல் தொழில் நுட்ப வகையில் புதிதாக இருந்தாலும் அது பயன்படுத்தும் அடிப்படை மிகப்பழமையானதுதான். ஸ்வார்ம் என்பது எறும்பு, தேனி, கரையான், முதலான உயிரினங்களின் கூட்டத்தைக்குறிக்கும். மந்தை என்பது ஆடு, மாடுகளின் கூட்டம். இது ஹெர்ட் எனப்படுகிறது. கூட்ட மதி நுட்பம் அல்லது அதற்குச் சமனாக மந்தை புத்தி, கவனிக்க மந்த புத்தி இல்லை, பொருத்தமாயிருக்கும். தவிர சரியோ பிழையோ முன்னே செல்வரின் வழியில் செல்வதைத் தான் மந்தைப்புத்தி என்கிறோம்.
இந்த மந்தையானது ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமலும் ஒரு இடத்தில் இருந்து இயக்கம் ஏதுமில்லாமலும், ஆனாலும் ஏதோ ஒரு ஒழுங்கில் செயல் படுவதாகும். அந்த மத்திய இயக்கம் இல்லாத சுதந்திர நடத்தையிலும் அந்தக்குழுவின் ஒரு ஒழுங்கு நிறைந்த செயல்பாடு வெளிப்படும்.
இந்த நடவடிக்கையை அலசி ஆராய்ந்து இது அடுத்து வரும் நேரங்களில் எப்படி இருக்கும் என்பதைக்கணிக்க முயலுவதுதான் ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு.
இந்த வருடம் கென்டக்கி டெர்பி எனப்படும் அமெரிக்க குதிரை ரேசில் இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது! வருடா வருடம் இந்த டெர்பி ரேஸ் மே மாதத்தின் முதல் சனிக்கிழமை நடைபெறும். போன வருடம் இந்த ரேசை நடத்தும் நிறுவனமான சர்ச்சில் டவுன்ஸ் என்னும் கம்பெனி இந்த திரள் நுண்ணறிவு புரோகிராமை ரேசில் முதல் முறையாக பரிசோதனை அளவில் செயல் படுத்தியது. இந்த புரோகிராம் ரேஸ் நடக்கும் முன்பே முதலில் வரவிருக்கும் நான்கு குதிரைகளின் பெயர்களை மிகச்சரியாக கணித்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
"என்ன தலைவா! கிண்டி போனியே நேத்து, என்னாச்சு?"
"ஸ்பெக்டிராவுல எல்லாம் நான் சொன்னபடிதான்!"
"அடேயப்பா! எத்தன லாபம்?"
"லாபமா! அதுங்க வர்ர வரிசை தப்பாப்போச்சுப்பா!"
ஆம் ஸ்பெக்டிரா என்பது முதல் நாலு குதிரைகளின் பெயரையும் அவற்றின் சரியான வரிசையையும் முன்பே கணித்தல். இதைத்தான் திரள் நுண்ணறிவு புரோகிராம் கென்டக்கி டெர்பியில் படுதுல்லியமாக கணித்திருந்தது.
இந்த இயலின் அடிப்படை வெகு இயற்கையான விஷயங்கள்தாம். பறவைகள் கூட்டமாகப்பறக்கும் நேர்த்தியைக் கவனித்தால் புரியும். அவற்றை இப்படிப்பற என்று யாரும் கட்டளையிடுவதில்லை. தன் சுற்றத்தாருடன் ஒன்று சேர்ந்து ஒரு முறையில் பறக்கும்போதே, அதில் ஒரு ஒழுங்கும் அந்த ஒழுங்கின் குழுமச்சக்தியும் வெளிப்படுவதாக விற்பன்னர்கள் சொல்லுகிறார்கள்.
அதே அடிப்படையில்தால் இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு இயலும் வடிவமைக்கப்படுகிறது. இதே போல எறும்புகளின் கூட்டச்செயல்பாடு, பாக்டீரியாக்களின் வளர்ச்சி, ஆடு மாடு மந்தைகள், நுண்ணுயிர் நுண்ணறிவு ஆகியவற்றிலும் இந்த திரள் நுண்ணறிவை பார்க்கலாம்.
"என்ன மாதிரிடி உங்க குடும்பம்?"
"ஏன், என் குடும்பத்துக்கென்னவாம்?"
"பாத்தேனே உன் தம்பி கல்யாணத்துல! பொண்ணப்பெத்தவரை என்னமா ஆட்டி வெச்சீங்க!"
"ஆமா இப்பவே கிடுக்கி போடலைன்னா அவருக்கு துளிர்த்துடுமே!"
"அதெப்படி உங்க குடும்பத்துல எல்லோரும் சொல்லி வெச்சா மாதிரி ஒரே விதமா டார்ச்சர் பண்றீங்க!"
பேசின ஆசாமிக்கு அன்று இரவு வெறும் பழைய சோறுதான் கிடைத்திருக்கும், என்றாலும் இதெல்லாம் திரள் நுண்ணறிவுக்குள் வராது.
இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவுக்கான பயன்பாடுகள் பெருகிக்கொண்டே வருகின்றன.
அமெரிக்க ராணுவம் இந்த இயலை பயன்படுத்தி ஆளில்லா டிரோன்களை இயக்கவும், நாசா விண்வெளி ஆராய்ச்சியிலும் மேலும் பல நாடுகள் மருத்துவத்துறையிலும் பயன்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன.
முக்கியமாக நானோ ரோபாட்டுகளை உடலினுள் செலுத்தி கேன்சர் கட்டிகளை முறியடிப்பதற்கான ஆராய்ச்சிகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.
"என்ன சார் டயர்டா இருக்கீங்க!"
"ஒண்ணுமில்ல, காலையில டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட்!"
"என்ன ஆச்சு?"
"ஒண்ணும் இல்ல, சின்ன பிராப்ளம்தான்! நுரையீரல்ல கேன்சர்னு தெரிஞ்சது! அதான் கார்த்தால போய் நானோபோட் டிரீட்மெண்ட் எடுத்துண்டு வந்தேன். கேன்சர் குணமாயிடுத்து. என்ன கொஞ்சம் டயர்டா இருக்கு. லஞ்சுக்கு அப்புறம் ரெண்டு மணி நேரம் தூங்கினா சரியாய்டும், வரட்டுமா?"
நடக்கத்தான் போகிறது!
- கவியரசு அப்படியா அந்த ட்யூனை வாசித்துக் காட்டு கேட்கலாம் என்றார்.
- ஹம்மிங் இவருக்கு வாய்த்தது போல பாடுவதற்கு யாருக்கும் வாய்க்கவில்லை.
சிலருக்கு இசை என்பது மூச்சுக் காற்றுப் போல. அப்படிப்பட்ட இசைப்பிரியர்களைப் கேட்டால் அவர்களுடைய விருப்பப் பாடகர்களுக்கு கோவிலே கட்டிவிடுவார்கள். பி.சுசீலாவின் ரசிகர்கள் பலர் அப்படிப்பட்டவர்கள்!
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம், சிங்களம், பெங்காலி, பஞ்சாபி, துளு, பதுகா, ஒரியா ஆகிய பலமொழிகளில் பாடி 'கின்னஸ் உலக சாதனை மற்றும் ஆசியா புக் ஆஃப் ரிகார்ட்ஸ் சாதனைகளுக்குறியவரான பி.சுசிலா தென்னிந்தியாவிற்கு கிடைத்த வரம்!!
இவரை 'ஹம்மிங் பேரரசி' எனலாம். அப்படியொரு வகைவகையான ஹம்மிங் இவருக்கு வாய்த்தது போல பாடுவதற்கு யாருக்கும் வாய்க்கவில்லை.
ஒருமுறை, "ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை" என்ற 'பணத்தோட்டம்' படப்பாடல் பதிவின்போது எம்.எஸ்.வி. ஹார்மோனியத்தில் வாசித்து சுசீலாவுக்குப் பாடல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சுசீலா அழுதுவிட்டு வீட்டிற்கு சென்று விட்டாராம். ஒலிப்பதிவு கூடத்தில் இருந்த ஒலிப்பதிவாளர் ரங்கசாமி, என்னப்பா, நீ எதாவது சொன்னாயா, சுசீலா வீட்டுக்குப் போயிட்டாங்க. என கேட்டார்"
இல்லையே நான் எதுவுமே சொல்லலையே என தொலைப்பேசியில் சுசீலாம்மாவை கூப்பிட்டு கேட்டபோது, "எம்.எஸ்.வி. சார், என்னைத் எதுவும் சொல்லவில்லை. அவர் சொல்லிக்கொடுத்த வகையில் பாடமுடியணுமே என்ற கவலையில் அழுதேன் " என சொன்னார்.
வீட்டுக்குப்போய் சுதாரித்துக் கொண்டு வந்து, மறுநாள் பாடிக்கொடுத்த அத்துணை சிரமமான பாடல் தான் இந்த "ஒருநாள் இரவு கண் உறக்கம் பாடல்! - இதில் ஒவ்வொரு சொல்லிலும் வளைந்து நெளிந்து போகும் கமகங்கள் (அசைவுகள்) பின்னே யாரால் தான் பாட முடியும்?

தாலாட்டுப் பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் எல்லோரின் மானசீக அம்மா இவர்.
"மலர்ந்து மலராத பாதி மலர் போல"பாட்டின் நடுவிலும், முத்தான முத்தல்லவோ சோகப் பாட்டில் வரும் விசும்பலை மறக்க முடியுமா?
"சிரிப்பில் உண்டாகும் இராகத்திலே" பாடலில் தாளத்துக்குள்
அடக்கி சுரங்களில் சிரிக்கும் `சிரிப்பு'
"என்ன நினைத்து என்னை
அழைத்தாயோ? ஏனிந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ?"-பாடலின் "நா தழுதழுப்பு."
இப்படி எம்.எஸ்.வி. இசையில் பி.சுசீலா பாடல்களின் பல்சுவை விருந்தைப் பற்றி எழுதிக் கொண்டேயிருக்கலாம்...
எம்.எஸ்.வி. இசையமைப்பில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அம்சங்களில் ஒன்று சீழ்க்கை ஒலி என்று சொல்லப்படும் விசில்.
உற்சாக பொழுதுகளில், கதாநாயகன் தனியாக, குறிப்பாக சைக்கிளில் செல்லும்போதும், நண்பர்களுடன் உல்லாசமாக பாடும் காட்சிகளில் காதல் படல்களில் தாலாட்டு பாடலில் கூட விசில் ஓசையை பயன்படுத்தியிருக்கிறார்.

கி.பானுமதி கிருஷ்ணகுமார்
ஒருமுறை "பார் மகளே பார்" பட பாடல் மெட்டைமைப்பின்போது முன்கூட்டியே கவியரசரிடம் நாங்க பாடல் வரிகள் இல்லாமல், வெறும் விசிலும், ஹம்மிங் மட்டும் வைத்து ஒரு பாடல் வைக்கப் போகிறோம் இந்தப் படத்தில் என்று சொல்கிறார்.
கவியரசு அப்படியா அந்த ட்யூனை வாசித்துக் காட்டு கேட்கலாம் என்றார்.
வாசித்து காட்டியதும், "விசு இது ரொம்ப அழகான ட்யூன். இதற்கு நான் வரிகள் தரேன். நல்லா வரும். இதற்கு விசில் ஹம்மிங் வேண்டாம்" என்றார்.
கவிஞரே, இயக்குநர் பீம்சிங் கிட்டே சொல்லி அவரும் ஒத்துக் கெண்டார் என சொல்கிறார் எம்.எஸ்.வி.
கண்ணதாசன் இதைப் பற்றி சிவாஜிடம் சொல்லி, இந்த ட்யூனை பாடலாகவே போடலாம் என பேச எல்லோரும் சம்மதித்து விட்டனர். ஆனால் எம்.எஸ்.வி. இந்தப் பாட்டில் கொண்டு வந்தது என்ன? விடுவாரா புதுமையை?
ஆரம்பமே முன்னிசையாக விசில் தான். அதற்கு ஒத்து ஹம்மிங். பிறகு தான் வரிகள்.
'நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே' பல்லவிக்கு முன்னும், சரணங்கள் முடிந்த பின்னும், பாடல் முடியும் போதும் விசிலும், ஹம்மிங்கிலும் முடித்திருக்கும் புதுமையை என்ன சொல்ல?
"வந்த நாள் முதல் இந்த நாள் வரை" என்றப் பாடலில் சிவாஜி சைக்கிளில் பாடிக் கொண்டே போகும்போது விசில். "கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதில் கிடைத்தது" என்றப் பாடலிலும், பாடலிலும் விசில்..
எம்.எஸ்.வி.யின் இசையமைப்பில் மின்னிய இன்னொரு சிறந்த மென்மையானக் குரலுக்கச் சொந்தக்காரர் பி.பி. சீனிவாஸ்.
பொதுவாக வீர எழுச்சிப் பாடல்கள் பாடும் எம்.ஜி.ஆருக்கு, பி.பி.எஸ். பாடிய மூன்று பாடல்கள் 'நீயோ நானோ யார் நிலவே' 'பால் வண்ணம் பருவம் கண்டு' 'என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்' ஆகியவை.
ஜெமினி கணேசனுக்கு ஏ.எம்.ராஜா பின்னணி பாடத் தொடங்கி, அந்த குரல் மிகவும் பொருத்தமென ஏற்றுக் கொண்டு விட்டார்கள் ரசிகர்கள்.
ஜெமினிக்கு பி.பி.எஸ். குரலை பொருத்திப் பார்க்கலாம் என எப்படிக் கணித்தாரோ எம்.எஸ்.வி. "யார் யார் யார் அவள் யாரோ" என்றப் பாடலில் ஜெமினிக்கு பி.பி.எஸ். பின்னணி பாடி பாடலோ சூப்பர் டூப்பர் ஹிட். "காலங்களில் அவள் வசந்தம்" என்ற பாடலுக்குப் பிறகு பி.பி.எஸ். பாடினாலே அது ஜெமினி பாடும் பாடலோ என்ற கேள்வி உருவானது.
இவர் பாடிய "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா", "மவுனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்", "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை". என்றப் தனிப் பாடல்களோ, பூஜைக்கு வந்த மலரே வா, ரோஜா மலரே ராஜகுமாரி, இந்த மன்றத்தில் ஓடி வரும் போன்ற டூயட் பாடல்களையோ ரசிக்காதவர்கள் யார்.
மணப்பந்தல் படத்தில் "உடலுக்கு உயிர் காவல்"என்றப்பாடல், ஒவ்வொரு வரியும் காவல் என்ற சொல்லே இணைப்பு தொடையாக முடியும். இந்த சோகப் பாடலை கசல் வகையில் பாட வைத்தது மட்டுமல்லாமல் இந்துஸ்தானி வகைப்பாடல் என்றாலே பி.பி, சீனிவாஸ்தான் என்கிற அளவுக்கு நிறையப் பாடல்களை அவருக்கு எம்.எஸ்.வி. தந்துள்ளார்.
நிறைய மொழிகளில் பாடியுள்ள பி.பி. சீனிவாஸ் கர்நாடக இசையில் மேதை, அழகாக கவிதைகள் எழுதக் கூடியவர். அவர் அடிக்கடி சொல்வது "மியூசிக் இல்லையென்றால் நாம் சிக் ஆகிவிடுவோம்".
- 26-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.
- உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தேடுதளமாக விளங்குகிறது.
இந்த தொழில் நுட்ப உலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை யாருக்கு என்ன சந்தேகம் வந்தாலும் முதலில் தேடக்கூடிய தளமாக இருப்பது கூகுள் தேடுதளம். அது தனது 26-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.

1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி ஸ்டான்போர்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களான செர்ஜே பிரின் மற்றும் லாரன்ஸ் பேஜ் ஆகியோர் இணைந்து உருவாக்கியது தான் கூகுள் எனப்படும் தேடுதளம். இது உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தேடுதளமாக விளங்குகிறது.
ஒன்றுக்கு பின் வரும் நூறு பூஜ்ஜியங்களை குறிக்கும் 'கூகல்' என்ற பெயரிலேயே இது முதலில் அழைக்கப்பட்டது. பின்னர் இது கூகுள் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
'தீமைகள் செய்ய வேண்டாம்' என்பதைக் குறிக்கும் 'டோண்ட் பீ ஈவில்' என்பதையே கூகுள் நிறுவனம் தங்களது இலக்காகக் கொண்டுள்ளது.
'கூகுள்' என்ற வார்த்தை, ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ளது. இதற்கு தகவல்களைத் தேடுதல் என்பது பொருளாக அமைகிறது.
இந்த தேடுதளம் ஆரம்பிக்கப்பட்டதில்இருந்து கூகுள் டூடுலும் ஒரு பகுதியாக இருக்கிறது. கூகுள் நிறுவனம், தேடுதளத்தையும் கடந்து கூகுள் சீட், கூகுள் டிரைவ், கூகுள் டாக்குமென்ட், கூகுள் மீட் என பல வடிவங்களில் தொழில் நுட்ப சேவைகளை அளித்து வருகிறது.
- இன்சுலின் அளவு அதிகமாக இருந்தாலே வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனை.
- கிளைக்கோஜன் சேமிப்பிலும் பிரச்சினைகள் வரும்.
சினைப்பை நீர்க்கட்டி என்கிற பிரச்சனை பற்றி இப்போது பெண்கள் எல்லோருமே ஓரளவு அறிந்திருக்கிறார்கள். இது பெண்களை பாதிக்கின்ற ஒரு முக்கியமான ஹார்மோன் பிரச்சனையாகும். இதை பொதுவாக பி.சி.ஓ.எஸ். என்று அழைப்பார்கள். இதன் விரிவாக்கம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பதாகும்.
இதுபற்றி நோயாளிகள் முக்கியமாக கேட்கும் விஷயம், டாக்டர் எனக்கு நீர்க்கட்டியா? கட்டி இருக்கிறதா என்பார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்லுகின்ற முதல் பதில்... இது கட்டிகள் அல்ல, இது நாளமில்லா சுரப்பிகளில் இருந்து வருகின்ற ஹார்மோன்களால் உருவாகக்கூடிய ஒரு பிரச்சனையாகும்.

சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை எதனால் வருகிறது?
சினைப்பை நீர்க்கட்டி ஹார்மோன் பிரச்சினை எதனால் வருகிறது என்று பல ஆய்வுகளும் தெளிவுபடுத்துகின்றன. சினைப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் (இன்சுலின் எதிர்ப்பு) என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.
இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகமாவதால் இந்த பெண்களுக்கு பொதுவாக பலவித பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவர்களுக்கு உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும். இன்சுலின் அளவு அதிகமாக இருந்தாலே சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனைகளை உருவாக்கும்.
அதேபோல் கிளைக்கோஜன் சேமிப்பிலும் பிரச்சனைகள் வரும். இந்த இன்சுலின் அதிகரிப்பால் பல நேரங்களில் கல்லீரலில் ஸ்டீராய்டின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்பட்டு, ஆண்களுக்கான ஹார்மோன் பெண்களுக்கு சுரப்பது அதிகரிக்கிறது.
இது தவிர இந்த இன்சுலின் அதிகமாக இருப்பதால் பல நேரங்களில் கொழுப்பின் வளர்சிதை மாற்றங்களால் கொழுப்பு அதிகரிக்கிறது. இந்த மாற்றங்கள் தான் சினைப்பை நீர்க்கட்டியின் அடிப்படையாகும்.
சினைப்பை நீர்க்கட்டி பாதிப்புள்ள பெண்களுக்கு கொழுப்பு அதிகரிப்பதால் உடல் பருமனாக இருப்பார்கள். அவர்களுக்கு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் மாறுபாடு இருப்பதால் சர்க்கரை நோய் ஏற்படும்.
ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஹார்மோன், பெண்களுக்கு அதிகமாக சுரப்பதால் ஆண்களை போன்ற சில தன்மைகளும் அவர்களுக்கு உருவாகும். உதாரணமாக இந்த பெண்களுக்கு மீசை, தாடி, கைகால்களில் முடி ஆகிய மாற்றங்கள் உருவாகும். ஆண்களை போல் சில நேரங்களில் குரல் கூட மாறலாம்.
மேலும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் அது சினைப்பையில் இருக்கிற கருமுட்டைகளின் முதிர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி, அதன் வளர்ச்சியை தடுக்கிறது.

கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதன் மூலம் பி.சி.ஓ.எஸ்.மாற்றங்கள் சினைப்பையில் வரும்.
மேலும் இந்த இன்சுலின் சினைப்பையில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. உடலில் எல்லா பகுதிகளையும் பாதிக்கிறது. இதனால் சதைகள், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவற்றில் வளர்சிதை மாற்றங்களும், அதனால் பலவிதமான சிக்கல்களும் ஏற்படுகின்றன.
உதாரணமாக கொழுப்பு அதிகமானால் இருதயத்துக்கு போகும் ரத்த ஓட்டம் தடைபட்டு இருதய பிரச்சனை ஏற்படலாம். குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தால் சர்க்கரை அதிகமாகி நீரிழிவு பாதிப்பு வரலாம்.
கொழுப்பு அதிகமாகும் போது உடல் பருமன் ஏற்படலாம். இவை அனைத்துக்கும் அடிப்படை இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஆகும்.
இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஏன் ஏற்படுகிறது? யாருக்கு வருகிறது?
உடல் பருமன் அதிகமாக இருக்கிற எந்த ஒரு நபருக்கும் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகமாக இருக்கும். இந்த இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகமாவது உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது.
அதனால் தான் இளம் பருவத்தில் திடீரென்று உடல் எடை கூடும், சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினைகளும் வரும்.
ஒரு இளம்பெண் நன்றாக வேலை செய்து கொண்டிருப்பார், உடல் ஒல்லியாக இருப்பார். திடீரென்று அவருக்கு உடல் எடை அதிகரிக்கும். இதனால் அவருக்கு பி.சி.ஓ.எஸ். மாற்றம் வர ஆரம்பித்து விடும்.
உடல் பருமன் தான் இதனுடைய முக்கிய அடிப்படை காரணமாகும். இது தவிர மேலும் பல காரணங்களும் உள்ளன. மரபு ரீதியான காரணங்களும் இருக்கிறது. மன அழுத்தமும் இதற்கு காரணமாக அமைகிறது. இவை எல்லாம் இருந்தால் கூட உடல் பருமன் தான் முக்கியமான காரணம் ஆகும்.
இந்த இன்சுலின் ரெசிஸ்டன்சை குறைப்பதற்கு, உடல் எடையை குறைப்பது தான் முக்கியமான தீர்வாகும். சில நேரங்களில் மரபு வழியிலான பிரச்சனையை மாற்ற முடியாது. ஆனால் உடல் பருமனால் உருவாகின்ற இந்த பிரச்சினையை உங்களால் கண்டிப்பாக சரி செய்ய முடியும்.
அந்த வகையில் உடல் பருமன் குறைப்பு தான், இதற்கு முக்கியமான சிகிச்சை முறையாகும்.
சினைப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?
சினைப்பை நீர்க்கட்டியால் ஏற்படும் பாதிப்பால் பெண்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதனை தடுப்பதற்கு முதல் வழிமுறையே வாழ்க்கை முறைகளில் மாற்றத்தை கொண்டு வருவது தான்.
இதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டியை சரிப்படுத்த முடியும். இதை முழுமையாக குணப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருந்தாலும் கூட இதன் பாதிப்புகளில் இருந்து முழுமையாக தங்களை பாதுகாக்க முடியும்.
சினைப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும், என்னென்ன உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும், அவர்களுடைய வாழ்க்கை முறையை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இதில் எல்லோருமே மருத்துவர்களிடம் கேட்கின்ற விஷயம், டாக்டர்... உடல் எடையை குறைப்பதற்கு மாத்திரை கொடுப்பீர்களா என்பார்கள். நான் கடந்த 30 வருடங்களாக சினைப்பை நீர்க்கட்டி பாதித்த ஏராளமான பெண்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் அவர்கள் கேட்கும் முதல் கேள்வியே இதுதான்.
உடல் பருமனை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் தான் முக்கியமான விஷயம். அதில் முதல் முக்கியமான விஷயம் உடற்பயிற்சி. சரி... எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
என்னிடம் சிகிச்சை பெற வந்த ஒரு பெண், 'டாக்டர் தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி செல்கிறேன், ஆனால் உடல் பருமன் குறையவில்லை' என்றார்.
அரை மணி நேரம் நடைபயிற்சி சென்றால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியாது. அதற்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.
வாரத்துக்கு 3,500 கலோரி குறைப்பு அவசியம்:
இன்று எல்லோருடைய கையிலும் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் இருக்கிறது. நீங்கள் எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள், எவ்வளவு கலோரி செலவு செய்கிறீர்கள் என்பதை அறிய நிறைய செயலிகள் இருக்கிறது.
உடல் எடையை குறைப்பதற்கு ஒரு வாரத்தில் 3,500 கலோரிகள் குறைக்க வேண்டும் என்று நீங்கள் இலக்கு நிர்ணயம் செய்யுங்கள்.
அப்படியென்றால் தினமும் நீங்கள் குறைந்தபட்சம் 500 கலோரிகளை குறைக்க வேண்டும். இதனை நீங்கள் குறைப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஒரு மணி நேரத்தில் 5 முதல் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் தான், 300 முதல் 400 கலோரிகளை உங்கள் உடல் செலவு செய்யும். இந்த கலோரி கணக்கீடு ரொம்ப ரொம்ப முக்கியம்.
இதைப்பற்றி பலர் சரியாக தெரிந்து கொள்வதில்லை. தினமும் நடைபயிற்சி செல்கிறேன், உடற்பயிற்சி செய்கிறேன் என்று சொல்வார்கள்.
ஆனால் எவ்வளவு நேரம் என்று கேட்டால் 10 நிமிடம் உடற்பயிற்சி செய்வார்கள். அரைமணி நேரம் நடைபயிற்சி செல்வார்கள். இது போதாது. நீங்கள் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு வாரத்துக்கு 3500 கலோரிகளை குறைக்க வேண்டும்.
ஆனால் 500 கலோரிகளை குறைத்து 1,000 கலோரி அளவு உணவை சாப்பிட்டால் அது தவறு. நமது உடல் உழைப்பு, அன்றாட செல்களின் இயக்கம் ஆகியவற்றுக்காக நமது உடலுக்கு தினந்தோறும் 900 கலோரிகள் தான் தேவை.
இந்த 900 கலோரிகளை கொண்ட உணவுகளை மட்டும் தினமும் சாப்பிட்டு, தினமும் 500 கலோரிகளை குறைக்க உடற்பயிற்சி செய்தால் தான், தேவையில்லாத கலோரி குறையும். இது நிறைய பேருக்கு தெரிவதில்லை.
உடற்பயிற்சி செய்வார்கள், ஆனால் நன்றாக சாப்பிடுவார்கள், இது தவறு. கலோரி கணக்கீட்டை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி அதிகம் செய்யுங்கள், உணவை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள், இதற்காக அன்றாட உணவு பட்டியலை சரியாக பராமரியுங்கள். உங்கள் உணவு வகைகளில் கலோரிகளை குறைப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.






