search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sparrows"

    • உலகம் முழுவதும் சிட்டுக்குருவிகள் இனம் அழிவை சந்தித்து வருகிறது.சிட்டுக்குருவிகளை பாதுகாக்க பல்வேறு பறவை ஆர்வலர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
    • உணவு வைத்து சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    உலகம் முழுவதும் சிட்டுக்குருவிகள் இனம் அழிவை சந்தித்து வருகிறது.சிட்டுக்குருவிகளை பாதுகாக்க பல்வேறு பறவை ஆர்வலர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதுகுறித்து புதுவை பசுமை இயக்க தலைவர் அருண் தெரிவித்ததாவது:-

    ஆயிரக்கணக்கான கூண்டுகள் தயாரித்து புதுவை அரசு வழங்கி பொது இடங்களான பாரதி பூங்கா, கடற்கரை சாலை, தாவரவியல்பூங்கா உட்பட பல பகுதிகளில் பொருத்தி, அதற்கு உணவு வைத்து சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் உலக சிட்டுக்குரு விகள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 8 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட மெகா சிட்டுக்குருவிகள் கூண்டை தயாரித்து புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் ஒப்படைத்து, அவர் தெரிவிக்கும் இடத்தில் பொருத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் இதேபோல 4 மெகா கூண்டுகள் தயாரிக்கும் பணி நடந்து வருவதாகவும், விரைவில் இது புதுவையின் முக்கிய இடங்களில் பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சிட்டுக்குருவிகள் தினத்தை யொட்டி கடலுக்கு அடியில் விழிப்புணர்வு பேனர் ஏற்றவும், தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு 500 சிறிய ரக சிட்டுக்குருவிகள் கூண்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரஜினியின் 2.0 பட பாணியில் கொத்து கொத்தாக மைனா குருவிகள் இறந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே நடந்துள்ளது. #Sparrows
    கொடுமுடி:

    சமீபத்தில் வெளியான ரஜினியின் 2.0 படத்தில் செல்போன் டவர்களால் பறவைகள் குறிப்பாக சிட்டு குருவிகள் இறந்து விழுவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு செல்போன் டவர்களால் பறவைகள் இனமே அழிந்து வருவதாகவும், வருங்காலத்தில் இதை குறைக்க வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

    அந்த படத்தில் வந்த காட்சி போன்ற சம்பவம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே நடந்துள்ளது. பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கொடுமுடி அடுத்த சாலை புதூர் சந்தை வளாகத்தில் பல ஆண்டுகளாக வேப்பமரம், புளியமரம், புங்கை மரம் என பலவகை மரங்கள் உள்ளன.

    இந்த மரங்களில் நூற்றுக்கணக்கான பறவைகள் குறிப்பாக மைனா குருவிகள் அதிக அளவில் கூடுகள் கட்டி வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் இன்று காலை அந்த மரங்களில் இருந்து மைனா குருவிகள் கொத்து...கொத்தாக இறந்து விழுந்தன. இதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


    சிலர் இறந்து விழுந்த மைனா குருவிகளை சாக்கு பைகளில் அள்ளிச்சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘‘மைனா குருவிகள் இறந்து விழுந்த பகுதிக்கு அருகில் 200 மீட்டர் தூரத்தில் செல்போன் டவர்கள் உள்ளன. அந்த செல்போன் டவர்களால்தான் மைனாக்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு இறந்து விழுகின்றன’’ என்று புகார் கூறினார்கள்.

    இது பற்றி விசாரணை நடந்து வருகிறது. #Sparrows
    ×