search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South Chennai Constituency"

    கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். #LoksabhaElections2019

    சென்னை:

    கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன்,வீதி வீதியாக வாக்கு சேகரித்தார் அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

    அவர் பொதுமக்களிடம், “அரசின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். மேலும் அ.தி. மு.க. அரசு கொடுத்துள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

    பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து உள்ள நமது வேட்பாளர் மீண்டும் வெற்றி பெற்றவுடன் பல புதிய திட்டங்களை தொகுதியின் வளர்ச்சிக்காக செயல்படுத்துவார் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் முன்மாதிரி தொகுதியாக தென் சென்னையை உருவாக்கவும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டார்.

    அவருடன் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதிச் செயலாளர் கே.பி.கந்தன், அம்மா பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர், ஒன்றிய செயலாளர் என்.சி. கிருஷ்ணன், கோவிலம்பாக்கம் ஊராட்சிக் கழகச் செயலாளர் கோவிலம் பாக்கம் சி.மணிமாறன் மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர். #LoksabhaElections2019

    பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக டாக்டர் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். அவர் இன்று வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். #ADMK

    சென்னை:

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே சாமி கும்பிட்டு விட்டு தனது பிரசார பயணத்தை தொடங்கினார். திறந்த ஜீப்பில் நின்றபடி வீதிவீதியாக சென்று அவர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்காளர்களை பார்த்து கும்பிட்டபடி இரட்டை இலை சின்னத்துக்கு அவர் ஓட்டு கேட்டார்.

    வேட்பாளர் ஜெயவர்தனுடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ. பா.ம.க. மாவட்ட செயலாளர் சிவகுமார், தே.மு.தி.க. ஆனந்தன், பா.ஜ.க டால்பின் ஸ்ரீதர், த.மா.கா கொட்டிவாக்கம் முருகன், அ.தி.மு.க. பகுதி செயலாளர் டி.ஜெயசந்தின், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கந்தன், அசோக், வட்ட செயலாளர் தங்கதுரை என்கிற பாபு உள்பட அ.தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க, பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    பிரசாரத்தின் போது வழி நெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாடியில் நின்று பூக்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே தொடங்கிய பிரசாரம் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக சென்று கலங்கரை விளக்கம் அருகே முடிவடைந்தது. பிரசாரத்தின் இடையே ஜெயவர்தன் மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது :-

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. மயிலாப்பூர் தொகுதி மட்டுமல்ல 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.

    ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பொன்னான நலத்திட்டங்கள் இன்றும் நினைவு கூறத்தக்கவையாக உள்ளது. தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எண்ணற்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

    எம்.பி. மேம்பாட்டு நிதி மூலம் தென்சென்னை தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்களை வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி உள்ளேன். ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி நாங்கள் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறோம். நிச்சயம் இந்த பாராளுமுன்ற தேர்தலில் வெற்றி பெற்று மாநில உரிமையை நிலைநாட்டுவோம்.

    இவ்வாறு வேட்பாளர் ஜெயவர்தன் கூறினார். #ADMK

    ×