search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soldier Death"

    • அருளானந்த் தனது மகள் கண் முன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • படுகாயமடைந்த அருளானந்தின் மகளை பொதுமக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புலியடிதம்மம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த் (வயது45), இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இவரது மகள் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை அருளானந்த் தனது மகளை கல்லூரிக்கு அழைத்து சென்றார். அவர்கள் மோட்டார் சைக்கிளில் கோபாலபுரம் அருகே வளைவில் வந்தபோது தேவகோட்டையில் இருந்து காளையார் கோவில் நோக்கி சென்ற காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் படுகாயமடைந்த அருளானந்த் தனது மகள் கண் முன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அருளானந்தின் மகளை பொதுமக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் திருவே கம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான அருளானந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த ரஹ்மத்துல்லாக் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகள் கண்முன்பு தந்தை விபத்தில் பலியான சம்பவம் தேவகோட்டை பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    பஞ்சாப்பில் நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூட்டில் குமரி மாவட்ட ராணுவ வீரர் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் அந்த கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. #NaxalOperation #TNSoldierDeath
    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையை அடுத்த பருத்திக்காட்டு விளையைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 38). இவர் கடந்த 16 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி சுபி. கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி இவர்களுக்கு திருமணம் நடந்தது. தற்போது சுபி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். 15 நாட்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் மனைவியை பார்ப்பதற்காக ஜெகன் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் விடுமுறை முடிந்து பஞ்சாப் மாநிலத்துக்கு பணிக்கு சென்றார்.

    நேற்று அங்கு நக்சலைட் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஜெகனும் ஈடுபட்டு இருந்தார். நக்சலைட்டுகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஜெகன் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த தகவல் தக்கலை பருத்திக்காட்டு விளையில் உள்ள உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஜெகனின் மரணச் செய்தி கேட்டு அவரது கர்ப்பிணி மனைவி சுபி மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.



    ஜெகனின் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை உறவினர்கள் தொடர்பு கொண்டனர். அவரது முயற்சியின் பேரில் ஜெகனின் உடலை ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அனேகமாக நாளை ஜெகன் உடல் சொந்த ஊர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பலியான ராணுவ வீரர் ஜெகனின் தந்தை வேலப்பன். தாயார் சீதாலட்சுமி. இவருக்கு 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். ஜெகன் சிறு வயதாக இருக்கும்போது வேலப்பன் இறந்து விட்டார். இதனால் ஜெகன் குடும்ப பாரத்தை சுமந்தார். 2 சகோதரிகளுக்கும் திருமணம் செய்து கொடுத்த பின்தான் தனக்கு திருமணம் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தார்.

    அதன்படி 2 சகோதரிகளுக்கும் திருமணம் நடந்த பின்னர் தனது 38 வயதில் தான் ஜெகன் திருமணம் செய்து கொண்டார். அவர் இறந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் அந்த கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ஜெகனின் மனைவி சுபியின் சொந்த ஊர் தெற்கு சூரங்குடி ஆகும். அந்த கிராமத்திலும் உறவினர்கள் சோகம் அடைந்துள்ளனர். #NaxalOperation #TNSoldierDeath



    ×