search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேவகோட்டையில் விபத்து ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கார் மோதி பலி- மகள் கண் முன்னே பரிதாபம்
    X

    தேவகோட்டையில் விபத்து ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கார் மோதி பலி- மகள் கண் முன்னே பரிதாபம்

    • அருளானந்த் தனது மகள் கண் முன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • படுகாயமடைந்த அருளானந்தின் மகளை பொதுமக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புலியடிதம்மம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த் (வயது45), இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இவரது மகள் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை அருளானந்த் தனது மகளை கல்லூரிக்கு அழைத்து சென்றார். அவர்கள் மோட்டார் சைக்கிளில் கோபாலபுரம் அருகே வளைவில் வந்தபோது தேவகோட்டையில் இருந்து காளையார் கோவில் நோக்கி சென்ற காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் படுகாயமடைந்த அருளானந்த் தனது மகள் கண் முன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அருளானந்தின் மகளை பொதுமக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் திருவே கம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான அருளானந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த ரஹ்மத்துல்லாக் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகள் கண்முன்பு தந்தை விபத்தில் பலியான சம்பவம் தேவகோட்டை பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×