என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Solar Bicycle"

    • ஒரு பேட்டரி 12 மணி நேரம் சேமிப்பு என 4 சேமிப்பு பேட்டரிகள் மூலம் மொத்தம் 48 மணி நேரம் சைக்கிளை இயக்கும்.
    • சோலார் சைக்கிளை நவீன்குமார், சபரி இருவரும் இணைந்து உருவாக்கினர்.

    டி.என்.பாளையம், 

    டி.என்.பாளையம் அடுத்த பெருமுகை புதூர் ஊராட்சி, வரப்பள்ளம் பகுதியில் செயல்பட்டு வரும் கொங்கு வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பெருமுகை சைபன் புதூரை சேர்ந்த டி.நவீன்குமார் மற்றும் எஸ்.ஆர்.சபரி ஆகிய இருவரும் 9-ம் வகுப்பில் பயின்று வருகின்றனர்.

    நண்பர்களான நவீன்குமார், சபரி இருவரும் பேட்டரி சைக்கிளில் பள்ளிக்கு வந்து சென்று உள்ளனர். ஒரே வகுப்பில் படிக்கும் நவீன், சபரி ஆகிய இருவருக்கும் நாளடைவில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் அதிகமாக இருந்து உள்ளது.

    இதனால் பள்ளிக்கு ஓட்டி வரும் சைக்கிளை இருவரும் இணைந்து சோலாரில் இயங்கும் சைக்கிளாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    48 வாட்ஸ் அளவில் சோலார் தகடுகளை பயன்படுத்தி, ஒரு பேட்டரி 12 மணி நேரம் சேமிப்பு என 4 சேமிப்பு பேட்டரிகள் மூலம் மொத்தம் 48 மணி நேரம் சைக்கிளை இயக்கும் வகையில் சோலார் சைக்கிளை நவீன்குமார், சபரி இருவரும் இணைந்து உருவாக்கினர்.

    பகல் நேரத்தில் சூரிய ஒளியால் சோலார் தகடுகள் மூலமாகவும், இரவு நேரத்தில் சோலார் மின்கலம் (சேமிப்பு பேட்டரிகள்) மூலமாகவும் இந்த சோலார் சைக்கிளை இயக்கி செல்லும் வகையில் உருவாக்கினர்.

    நவீன்குமார், சபரி ஆகிய இருவரும் உருவாக்கிய இந்த சோலார் சைக்கிளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கொங்கு வித்யாலயா பள்ளி வளாகத்தில் பள்ளியின் முத ல்வரும் அறிவியல் ஆசிரிய ருமான நளினி செங்கோ ட்டையன் தலை மையில் நடை பெற்றது.

    இந்த சோலார் சைக்கிளை பள்ளியின் கணித ஆசிரியர் சங்கர் அவர்களின் உதவி யு டன் உருவாக்கி ய–தா கவும், ஊக்க ப்படுத்திய பள்ளி முதல்வர் நளினி செங்கோ ட்டை யன், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுக்கு இருவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    நவீன்குமார், சபரி இரு மாணவர்களையும் பள்ளியின் முதல்வர் நளினி செங்கோட்டையன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    ×