search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smuggled in car seized"

    • சித்தோடு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    தமிழக அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கண்காணிக்க தமிழக முழுவதும் உள்ள காவல்துறையினர் மூலமாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு போலீசார் சித்தோடு அருகே உள்ள சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள சத்தியமங்கலம் செல்லும் மேம்பாலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்றை சந்தேகத்துக்கு இடமான வகையில் நிறுத்தி சோதனை செய்த போது காரில் தடை செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான 130 கிலோ குட்கா பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் குட்கா பொருட்களை கொண்டு சென்ற ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த தண்டபாணி (40) என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×