search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smashes a motorcycle"

    • ஆத்திரம் அடைந்த யானை மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியது.
    • 2 பேரும் ஓடி சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அவ்வப்போது குடிநீர், உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி செல்லும் போது அருகில் உள்ள விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை கிராமம் செங்காடு, ஏரியூர், பூதிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதமாக ஒற்றை யானை பகல் நேரங்களிலேயே உலா வருகிறது. விவசாய பூமியில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை கடம்பூர் அருகே ஒற்றை யானை ஒன்று அவ்வழியாக வந்த வாகனங்களை கடுமையாக துரத்தியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் வந்த ஒருவர் திடீரென யானை துரத்தி வருவதை கண்டு மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு நண்பருடன் ஓடி சென்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த யானை மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியது. நல்ல வாய்ப்பாக 2 பேரும் ஓடி சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    நீண்ட நேரம் சாலையில் நின்று கொண்டிருந்த அந்த யானை பின்னர் வனப்பகுதிக்குள்ளே சென்றது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள, வாகன ஓட்டிகள் அஞ்சினார்கள். 

    ×