என் மலர்
நீங்கள் தேடியது "வெற்றி நிச்சயம் திட்டம்"
- எந்த ரிசல்ட் வந்தாலும் நான் முதல்வன் திட்டத்தில் படித்தோர் எத்தனை பேர் வெற்றி என்றுதான் அதிகாரிகளிடம் கேட்பேன்.
- தமிழ்நாட்டை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் மாணவர்கள் தயாராகி விட்டனர்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நான் முதல்வன் திட்டம் 3-ம் ஆண்டு வெற்றி விழா, வெற்றி நிச்சயம் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
வெற்றி நிச்சயம் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* நான் முதல்வன் திட்டத்தில் என் நம்பிக்கையை காப்பாற்றும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் பாராட்டுகளும்.
* ஒவ்வொரு குழந்தைகள் வெற்றிபெறும் போதும் தந்தை போல் மகிழ்ச்சி அடைகிறேன்.
* எந்த ரிசல்ட் வந்தாலும் நான் முதல்வன் திட்டத்தில் படித்தோர் எத்தனை பேர் வெற்றி என்றுதான் அதிகாரிகளிடம் கேட்பேன்.
* கடந்த 3 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 3.28 லட்சம் பேர் முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர்.
* யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 57 போட்டித் தேர்வர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்.
* தமிழ்நாட்டை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் மாணவர்கள் தயாராகி விட்டனர்.
* வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பேராசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து திறன் பயிற்சி சான்று வழங்கி உள்ளோம்.
* 18 முதல் 35 வயது வரை உள்ள படித்த வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
* தமிழ்நாடு என்றால் சிறந்த கல்வி, திறனறிவு, எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதாய் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






