என் மலர்
நீங்கள் தேடியது "ஷெரிஃப்"
- திரு. ஷெரீஃப், தனது முதல் திரைப்படமான ரணம் அறம் தவறேல் மூலம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையே கொண்டாட்டமளிக்கும் வரவேற்பையும் பெற்றவர்.
- படத்தின் இசையை விவேக் மெர்வின் மேற்கொள்கின்றனர்.
திரு. ஜெய்கிரண் தலைமையிலான ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பில் உருவாக்கும் முதல் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு வெற்றிகரமான தயாரிப்புகளில் பணியாற்றிய அனுபவமுள்ள திரு. ஜெய்கிரண், தனக்கு நெருக்கமான கதையை உணர்வுபூர்வமாக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் மூலம், ரசிகர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக பரிச்சயமான KPY பாலா, கதாநாயகனாக தனது சினிமா பயணத்தைத் தொடங்குகிறார். இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தை இயக்கும் திரு. ஷெரீஃப், தனது முதல் திரைப்படமான ரணம் அறம் தவறேல் மூலம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையே கொண்டாட்டமளிக்கும் வரவேற்பையும் பெற்றவர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய திரைப்படம், ஒரு Feel-Good Emotional Drama ஆக உருவாகிறது. இப்படத்திற்கு அவர் தான் கதை மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இயக்குநர் ஷெரீஃப் கூறுகிறார் 'ரணம் அறம் தவறேல்' என்ற த்ரில்லர் படத்திற்கு பிறகு, நான் இயக்கும் "இந்தக் கதை எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. எனது இரண்டாவது திரைப்படமாக இந்த கதையை தர வேண்டும் என்பதே என் நோக்கம். நான் இந்தக் கதையை தயாரிப்பாளர் திரு. ஜெய்கிரணிடம் கூறியதும், யோசனையில்லாமல் உடனே 'ஆம்' என்று சொன்னார். அந்த நம்பிக்கையும், நேரடி ஆதரவும் ஒரு இயக்குநராக எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் உறுதியையும் வழங்கியது. பாலா கதாநாயகனாகவும் , தேசிய விருது பெற்ற இயக்குனர்பாலாஜி சக்திவேல் சார்,தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா மேடம் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு பெருமை நிரம்பியது .இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. நேர்த்தியான சினிமா கொடுக்க வேண்டும் என்ற என் எண்ணத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் அமையும்."
நமிதா கதாநாயகியாக நடிக்கிறார். தேசிய விருது பெற்ற பாலாஜி சக்திவேல் மற்றும் தேசிய விருது பெற்ற அர்ச்சனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் இசையை விவேக் மெர்வின் மேற்கொள்கின்றனர்.
- மூன்றாவது பாடலை நடிகர் அசோக் செல்வன் வெளியிட்டுள்ளார்.
- வருகிற 23-ம் தேதி இந்த படம் வெளியாகிறது.
ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள புதிய படம் ரணம். வைபவின் 25-வது படமாக ரணம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் வைபவுடன் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற 23-ம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

அதையொட்டி இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. இந்த வரிசையில், தற்போது ரணம் படத்தின் "பொல்லாத குருவி" மூன்றாவது பாடலை நடிகர் அசோக் செல்வன் வெளியிட்டுள்ளார். ஷெரிஃப் எழுதியிருக்கும் இந்த பாடலை ரங்கோதம் மற்றும் ஷெரிஃப் இணைந்து பாடியுள்ளனர்.
அரோள் கரோலி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பாலாஜி கே ராஜா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை முனீஸ் மேற்கொண்டுள்ளார்.