என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் மர்ம மரணம்"

    • கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக அவரது மனைவி, குழந்தைகள் அவரை பிரிந்து பணகுடியில் உள்ளனர்.
    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்டாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி மேலத்தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 53). மீனவர். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

    இதனிடையே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை பிரிந்து பணகுடியில் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த ஸ்டாலின் அப்பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை தாக்கியுள்ளார். இதனை பார்த்தவர்கள் ஸ்டாலினை கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் ஸ்டாலின் அங்குள்ள கடற்கரை பகுதிக்கு சென்று மீன் வலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்டாலின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்டாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனையில் தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×