என் மலர்
நீங்கள் தேடியது "எந்திரத்தில் சிக்கி பெண் பலி"
- பூங்கொடி (38). இவர் அதே பகுதியில் உள்ள உத்திரவேலு என்பவருக்கு சொந்தமான கயிறு திரிக்கும் மில்லில் கடந்த 7 வருடமாக வேலை செய்து வந்தார்.
- மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பூங்கொடியின் சேலை கயிறு திரிக்கும் எந்திரத்தில் சிக்கியது. இதில் பூங்கொடி படுகாயம் அடைந்தார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கருக்கல்வாடி கிராமம் கங்காநியூர் பகுதியை சேர்ந்தவர் கோபி.
இவரது மனைவி பூங்கொடி (38). இவர் அதே பகுதியில் உள்ள உத்திரவேலு என்பவருக்கு சொந்தமான கயிறு திரிக்கும் மில்லில் கடந்த 7 வருடமாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பூங்கொடியின் சேலை கயிறு திரிக்கும் எந்திரத்தில் சிக்கியது. இதில் பூங்கொடி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பூங்கொடி இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பூங்கொடியின் மகன் நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






