என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூதாடியதாக 3 பேர் கைது"

    • போலீசார் ரோந்து சென்றபோது சீட்டு வைத்து சூதாடிய அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
    • தப்பி ஓடிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்துள்ள முளியனூர் பிரிவு டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடு வதாக அம்மாப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது சீட்டு வைத்து சூதாடிய அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

    அப்போது 52 சீட்டுகள் வைத்து கொண்டு உள்ளே வெளியே வெட்டு சீட்டு சூதாட்டம் ஆடியதாக குருவரெட்டியூர் பி.கே.புதூரை சேர்ந்த பால்ராஜ் (40), பொன்னுசாமி (35), நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த மோகன் குமார் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் சீட்டாடும் இடத்தில் இருந்த 9 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×