என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜனதாவுக்கு ரெய்டு"

    • சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடக்கிறது.
    • இதையொட்டி நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடந்தது.

    நாமக்கல்:

    சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடக்கிறது. இதையொட்டி நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடந்தது.

    கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினர். வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் இதுவரை 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளேன். அனைத்து மாவட்டங்களையும் விட மிகுந்த எழுச்சியோடு நாமக்கல் மாவட்டத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதன் மூலம் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டை மிகப்பெரிய வெற்றி மாநாடாக மாற்றி காட்டுவீர்கள் என நம்புகிறேன்.

    இந்தியாவிலேயே ஒரு இயக்கத்தில் முதன் முதலில் இளைஞர் அணி தொடங்கப்பட்டது தி.மு.க.வில் தான். அதை தொடங்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. தமிழக அரசு என்ன செய்தது என்று கேட்பவர்களிடம் 4 திட்டங்களை எடுத்து கூறினால் போதும்.

    பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தால், ஒவ்வொரு பெண்களும் மாதம் ரூ.1,000 சேமிக்கிறார்கள். இதேபோல் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம், காலை உணவு திட்டம் ஆகியவை தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்களாகும். காலை உணவு திட்டத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் 1 கோடியே 16 லட்சம் மகளிர் இதுவரை பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டங்கள் குறித்து பேசுங்கள்.

    சி.ஏ.ஜி. என்கிற அமைப்பு மத்திய, மாநில அரசுகளின் செலவு கணக்கை தணிக்கை செய்யும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசில் ரூ.7½ லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை எனவும், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு பணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தோல்வி பயம்

    பிரதமர் மோடி எங்கே போனாலும் தோல்வி பயத்தால் முதல்-அமைச்சர் பற்றியும், என்னை பற்றியுமே பேசுகிறார். மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மூலம் ரெய்டு நடத்தி வருகிறது. நீங்கள் எத்தனை `ரெய்டு' நடத்தினாலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பா.ஜனதாவுக்கு ரெய்டு விடப்போவது நிச்சயம்.

    நான் பேசாததை பேசியதாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதில் நான் ஜெயிப்பேன் என்கிற நம்பிக்கை உள்ளது. எனவே நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ரூ.10 லட்சம் நிதி

    முன்னதாக இறந்துபோன இளைஞர் அணி நிர்வாகிகளின் குடும்பத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதிஉதவியை வழங்கினார். தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாநாட்டு நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அவர் புல்லட் மோட்டார் சைக்கிள் வழங்கினார்.

    பங்கேற்றவர்கள்

    இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஆனந்தகுமார், திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, அயலக அணி மாநில துணை செயலாளர் முத்துவேல் ராமசுவாமி, நாமக்கல் நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாலாஜி, பூக்கடை சுந்தர், நவலடி ராஜா, கதிரவன், மல்லை ெஜகதீஷ், கார்த்திகேயன், முரளி, நாமகிரிபேட்டை ஒன்றிய செயலாளர் ராமசுவாமி, ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, பாண்டமங்கலம் பேரூர் செயலாளர் பெருமாள் என்கிற முருகவேல், பேரூராட்சி தலைவர் சோமசேகர், கட்சி பிரமுகர்கள் இளம்பரிதி, பிரபாகரன், கார்த்திக், ரமேஷ்குமார், கலைவாணன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் இனியவன் இளங்கோவன், துணை தலைவர் குணாளன், அமைப்பாளர் விஜயபாஸ்கரன், துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், நல்லி சரவண குமார், சசிகுமார், முகேஷ், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் தர்மராஜன், துணை தலைவர் சோழா பிரகாஷ், அமைப்பாளர் சாதிக்பாட்ஷா, துணை அமைப்பாளர்கள் குமார், காமராஜ், கண்ணன், ஜி.கண்ணன், தயாநிதி, முரளி, சுடலை ராஜ், லோக விஜயன், அசோக்குமார் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத் நன்றி கூறினார்.

    ×