என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளுந்தங்கஞ்சி"

    • உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு.
    • உடல் ஆரோக்கியத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்று.

    சுருங்காத தோலும், மங்காத கண்களும், பெருக்காத இடுப்பும், தேயாத எலும்புகளும் கிடைக்க வேண்டுமென்றால் இதை சாப்பிட வேண்டும் என அறிவுறுத்துவார்கள் நம் முன்னோர்கள்.

    நம் மொன்னோரின் உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு. அழகும் ஆரோக்கியமும் முக்கியம் என்பவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி சேர்த்து வாருங்கள். உடல் ஆரோக்கியத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்று.

    இன்றைய வாழ்க்கை முறையில், கொஞ்சம் வேலை செய்தாலே நம்முடைய உடம்பு மிகவும் சோர்வடைந்து விடுகிறது. காரணம், நாம் சாப்பிடும் உணவு தான். வெறும் சாதம், இட்லி, தோசையிலும் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து முழுவதாகக் கிடைப்பது இல்லை. ஆகவே, நம் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், மாற்றிக்கொள்ள உளுந்துப்பால் பருகலாம். இதனை உளுந்தங்கஞ்சி என்றும் கூறலாம். இதனை எப்படி காய்ச்சுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    உளுந்து- 100 கிராம்

    வெல்லம்- 100 கிராம்

    ஏலக்காய்பொடி- ஒரு ஸ்பூன்

    சுக்குப்பொடி- ஒரு ஸ்பூன்

    பால்- ஒரு டம்ளர்

    செய்முறை:

    உளுந்தை முதலில் நன்றாக கழுவிவிட்டு அரைமணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு ஊறவைத்த நீருடன் உளுந்தை குக்கரில் சேர்த்து ஒரு பங்கு உளுந்துக்கு 6 பங்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். 3 விசில் வந்த பிறகு குக்கரில் இருந்து இறக்கி வேகவைத்த உளுந்தை தனியாகவும், தண்ணீரை தனியாக பிரித்து எடுக்க வேண்டும்.

    வேகவைத்தை உளுந்தை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். அதனுடன் உளுந்து வேகவைத்த தண்ணீரை சேர்த்து நன்றாக கெட்டி இல்லாமல் கலந்துகொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். வெல்லம் கரைந்தவுடன் அதனை வடிகட்டி, வேகவைத்து அரைத்து வைத்துள்ள உளுந்துப்பாலில் சேர்க்க வேண்டும். அதன்பிறகு அதில் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, பால் சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் காய்ச்சி இறக்கினால் சுவையான உளுந்துப்பால் தயார்.

    • மழைக்காலங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உளுந்தங்கஞ்சி.
    • உடலுக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம்.

    இன்றைய பரபரப்பான சூழலில் டிபன், லஞ்ச், டின்னர் என அனைத்தையும் சில நிமிடங்களில் சமைத்துவிட்டு வேலைக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. பின்னர் ஆரோக்கிய குறைவால் டாக்டரையும் தேடி அலைந்துகொண்டு இருக்கிறோம். இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெற மருந்து, மாத்திரைகள், பழங்கள், காய்கறிகள் என வாங்கும் செலவு அதுவேற தனிகணக்கு.

    இந்த மழைக்காலங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உளுந்தங்கஞ்சி வாரத்திற்கு 2 முறையாவது எடுத்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. செய்வதும் மிகவும் எளிது. மழைக்காலம் என்பதால் நோய்தொற்றும் அதிகமாகி வருகிறது. நோய்தொற்றில் இருந்து காப்பாற்ற நோய் எதிர்ப்பு சக்தியும், உடலுக்கு ஊட்டச்சத்தும் மிகவும் அவசியம். அதேவேளையில் சமையலும் விரைவில் முடிந்துவிடும்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இந்த உளுந்தங்கஞ்சியை தேர்வு செய்யலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது.

    தேவையான பொருட்கள்

    கருப்பு உளுந்து- 200 கிராம் (உடைத்தது)

    அரிசி- 100

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    பூண்டு- 10 பல்

    தேங்காய்- ஒரு கப் (துருவியது)

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    குக்கரில் கருப்பு உளுந்து, அரிசி, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து 10 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும். வேகவைத்த உளுந்தங்கஞ்சியை எடுத்து நன்றாக மசித்து கிளற வேண்டும். பின்னர் கஞ்சியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி பரிமாறலாம்.

    இதில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து அதிகளவில் இருப்பதால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மூட்டுவலி, கை, கால் சோர்வில் இருந்து விடுபட்டு சுறுசுறுப்பாக இருக்கலாம். கருப்பு உளுந்தில் உள்ள சத்துகள் பெண்களின் உடலுக்கு வலுசேர்க்கிறது. பிரசவத்திற்கு பின்னர் வரும் இடுப்பு வலி, எலும்புமுறிவு பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

    ×