என் மலர்tooltip icon

    சமையல்

    எலும்புகளுக்கு வலு சேர்க்கும் உளுந்தங்கஞ்சி
    X

    எலும்புகளுக்கு வலு சேர்க்கும் உளுந்தங்கஞ்சி

    • மழைக்காலங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உளுந்தங்கஞ்சி.
    • உடலுக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம்.

    இன்றைய பரபரப்பான சூழலில் டிபன், லஞ்ச், டின்னர் என அனைத்தையும் சில நிமிடங்களில் சமைத்துவிட்டு வேலைக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. பின்னர் ஆரோக்கிய குறைவால் டாக்டரையும் தேடி அலைந்துகொண்டு இருக்கிறோம். இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெற மருந்து, மாத்திரைகள், பழங்கள், காய்கறிகள் என வாங்கும் செலவு அதுவேற தனிகணக்கு.

    இந்த மழைக்காலங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உளுந்தங்கஞ்சி வாரத்திற்கு 2 முறையாவது எடுத்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. செய்வதும் மிகவும் எளிது. மழைக்காலம் என்பதால் நோய்தொற்றும் அதிகமாகி வருகிறது. நோய்தொற்றில் இருந்து காப்பாற்ற நோய் எதிர்ப்பு சக்தியும், உடலுக்கு ஊட்டச்சத்தும் மிகவும் அவசியம். அதேவேளையில் சமையலும் விரைவில் முடிந்துவிடும்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இந்த உளுந்தங்கஞ்சியை தேர்வு செய்யலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது.

    தேவையான பொருட்கள்

    கருப்பு உளுந்து- 200 கிராம் (உடைத்தது)

    அரிசி- 100

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    பூண்டு- 10 பல்

    தேங்காய்- ஒரு கப் (துருவியது)

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    குக்கரில் கருப்பு உளுந்து, அரிசி, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து 10 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும். வேகவைத்த உளுந்தங்கஞ்சியை எடுத்து நன்றாக மசித்து கிளற வேண்டும். பின்னர் கஞ்சியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி பரிமாறலாம்.

    இதில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து அதிகளவில் இருப்பதால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மூட்டுவலி, கை, கால் சோர்வில் இருந்து விடுபட்டு சுறுசுறுப்பாக இருக்கலாம். கருப்பு உளுந்தில் உள்ள சத்துகள் பெண்களின் உடலுக்கு வலுசேர்க்கிறது. பிரசவத்திற்கு பின்னர் வரும் இடுப்பு வலி, எலும்புமுறிவு பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

    Next Story
    ×