என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uludu milk"

    • உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு.
    • உடல் ஆரோக்கியத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்று.

    சுருங்காத தோலும், மங்காத கண்களும், பெருக்காத இடுப்பும், தேயாத எலும்புகளும் கிடைக்க வேண்டுமென்றால் இதை சாப்பிட வேண்டும் என அறிவுறுத்துவார்கள் நம் முன்னோர்கள்.

    நம் மொன்னோரின் உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு. அழகும் ஆரோக்கியமும் முக்கியம் என்பவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி சேர்த்து வாருங்கள். உடல் ஆரோக்கியத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்று.

    இன்றைய வாழ்க்கை முறையில், கொஞ்சம் வேலை செய்தாலே நம்முடைய உடம்பு மிகவும் சோர்வடைந்து விடுகிறது. காரணம், நாம் சாப்பிடும் உணவு தான். வெறும் சாதம், இட்லி, தோசையிலும் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து முழுவதாகக் கிடைப்பது இல்லை. ஆகவே, நம் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், மாற்றிக்கொள்ள உளுந்துப்பால் பருகலாம். இதனை உளுந்தங்கஞ்சி என்றும் கூறலாம். இதனை எப்படி காய்ச்சுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    உளுந்து- 100 கிராம்

    வெல்லம்- 100 கிராம்

    ஏலக்காய்பொடி- ஒரு ஸ்பூன்

    சுக்குப்பொடி- ஒரு ஸ்பூன்

    பால்- ஒரு டம்ளர்

    செய்முறை:

    உளுந்தை முதலில் நன்றாக கழுவிவிட்டு அரைமணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு ஊறவைத்த நீருடன் உளுந்தை குக்கரில் சேர்த்து ஒரு பங்கு உளுந்துக்கு 6 பங்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். 3 விசில் வந்த பிறகு குக்கரில் இருந்து இறக்கி வேகவைத்த உளுந்தை தனியாகவும், தண்ணீரை தனியாக பிரித்து எடுக்க வேண்டும்.

    வேகவைத்தை உளுந்தை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். அதனுடன் உளுந்து வேகவைத்த தண்ணீரை சேர்த்து நன்றாக கெட்டி இல்லாமல் கலந்துகொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். வெல்லம் கரைந்தவுடன் அதனை வடிகட்டி, வேகவைத்து அரைத்து வைத்துள்ள உளுந்துப்பாலில் சேர்க்க வேண்டும். அதன்பிறகு அதில் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, பால் சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் காய்ச்சி இறக்கினால் சுவையான உளுந்துப்பால் தயார்.

    ×