என் மலர்
நீங்கள் தேடியது "தேசிய ஆயுர்வேத தினம்"
- தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல்.
உலகளவில் "தேசிய ஆயுர்வேத தினம்" செப்டம்பர் 23-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இது ஆயுர்வேதத்தின் பழமையான மருத்துவ முறைகளை உலகளவில் மேம்படுத்தவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடைபிடிக்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு முதல், தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும் மத்திய அரசு 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ந்தேதி ''தேசிய ஆயுர்வேத தினம்" கடைபிடிக்கப்படுகிறது என்று அறிவித்தது.
ஆயுர்வேத நாளை கொண்டாட பல்வேறு கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் இலவச சுகாதார முகாம்களை ஏற்பாடு செய்து இலவசமாக மருந்துகளை வழங்குகின்றன. ஆயுர்வேத நாளன்று ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு பங்களித்தவர்களை அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருது' வழங்கி கவுரவிக்கிறது. தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருதுகள், ஒரு பாராட்டு சான்றிதழ் (தன்வந்திரி சிலை) மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நோக்கம்:
ஆயுர்வேதத்தின் பழமையான மருத்துவ முறைகளைப் பரப்புதல்.
ஆயுர்வேதத்தை உலகமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல்.
காரணம்:
ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் தன்வந்திரி முனிவரின் பிறந்த நாளான தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
முக்கியத்துவம்:
உடல், மனம் மற்றும் ஆவி ஆகியவற்றின் சமநிலையை மேம்படுத்துவதன் மூலம் முழுமையான ஆரோக்கியத்தை ஆயுர்வேதம் வழங்குகிறது.
- வியாதிகளுக்கு எந்த வகையான மருந்துகள் வழங்கப்படுகின்றன என விளக்கினார்.
- திருப்போரூர் அரிமா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
திருப்போரூர்:
திருப்போரூர் அரசு மருத்துவமனையில், ஆயுர் வேத மருத்துவ பிரிவில், 8-வது தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் தன்வந்தரி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி (பொறுப்பு) மருத்துவர் கீதாராணி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மைதிலி வரவேற்றார். ஆயுர்வேத மருத்துவர் ஜெயதேவி ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பை பற்றியும், நோய் வராமல் காத்துக்கொள்ள நாம் கடைபிடிக்க வேண்டியவைகள், உண்ண வேண்டிய உணவுகள், எண்ணைக்குளியலின் பயன்கள், அடுப்பாங்கரையில் ஆயுர்வேதம், ஆயுர்வேதத்தில் பஞ்ச கர்மா சிகிச்சைகள் போன்றவற்றை விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் வியாதிகளுக்கு எந்த வகையான மருந்துகள் வழங்கப்படுகின்றன என விளக்கினார். விழாவில் மூலிகை மருந்து பொருட்கள், நவதானியங்கள் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. விழாவில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் திருப்போரூர் அரிமா சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஆயுர்வேத மருந்தாளுநர் இன்பமணி நன்றி கூறினார்.






