என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்லதங்காள் நீர்வழிப்பாதை"

    • திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லதங்காள் அணைக்கு நீர் வரும் முக்கிய வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்கள் அமைத்து வருகின்றனர்.
    • .மழை நீர் அதிக அளவில் வரும் போது நீர் வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின் கம்பங்கள் மழை நீரில் அடித்து சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லதங்காள் அணைக்கு நீர் வரும் முக்கிய வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்கள் அமைத்து வருகின்றனர். தற்போது மழை காலம் துவங்க உள்ளதால் நல்ல தங்காள் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும்.மழை நீர் அதிக அளவில் வரும் போது நீர் வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின் கம்பங்கள் மழை நீரில் அடித்து சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர் பலி ஏற்படும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நீர் வழித்தடத்தில் உள்ள மின் கம்பங்களை அகற்றி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு விவசாயிகள், சங்க நிர்வாகிகள் , பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×