என் மலர்
நீங்கள் தேடியது "ஈரோட்டில் கிறிஸ்தவர்கள்"
- கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகின்றனர்.
- இதைத்தொடர்ந்து இன்று மாலை சிறப்பு திருப்பலியும் நடக்க உள்ளது.
ஈரோடு:
கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகின்றனர்.
இதன்படி ஈரோடு சத்தி சாலை சந்திப்பில் உள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி இன்று காலை கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களின் கல்லறைக்கு வந்து, கல்லறைகளை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்து, மலர்வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏந்தி, ஜெபப்புத்தகத்தை படித்து முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை சிறப்பு திருப்பலியும் நடக்க உள்ளது.
கல்லறை திருநாளையொட்டி ஈரோடு கல்லறை தோட்டத்தில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு பத்தி, மெழுகுவர்த்தி, பூக்க ள் போன்றவை விற்பனை செய்யப்பட்டன.






