என் மலர்
நீங்கள் தேடியது "இயற்கை இடுபொருட்கள்"
- 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது.
- குழுவின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் 2023-24-ம் ஆண்டில் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மண்புழு உரம், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், மீனமிலம் போன்ற இயற்கை இடுபொருட்களின் உற்பத்தி அலகுகளை நிறுவ, உழவர் குழுக்களுக்கு மானிய உதவியாக அலகு ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வீதம் 3 அலகுகளுக்கு 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது.
சிறு, குறு பெண் விவசாயிகள்அடங்கிய குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழுவினர் தங்களது இயற்கை இடுபொருட்களின் உற்பத்தி அலகினை ஒரு செயல்விளக்க அலகாக பராமரிக்க அனுமதிக்க வேண்டும்.
இது தொடர்பான உறுதிமொழி பத்திரம் பயனாளிகளிடம் பெற்று கொள்ளப்படும்.
தேர்வு செய்யப்பட்டபின் இத்திட்டத்தின் கீழ் பயன்பெ றும் குழுக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு உற்பத்தியை தொடர வேண்டும்.
மானியம் பெறும் குழு திட்டக் கூறு களை செயல்படுத்தும் போதும், செயல்படுத்திய பின்பும் புகைப்பட ஆதா ரத்தை சமர்பிக்க வேண்டும்.
திட்டத்தில் பயன் பெற விரும்பும் குழுக்கள் முழு முகவரியுடன் குழுவின் பெயர், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குழுவின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் விரிவான திட்ட அறிக்கை யினை வரும் 27-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட குழுக்களுக்கு ஒரு நாட்டு மாடு, மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, இயற்கை இடுபொருள் தயாரிக்க தேவையான கலன்கள், மூலப்பொ ருட்கள், பேக்கேஜிங் மற்றும் லேபிலிங் செய்ய தேவையான எந்திரங்களை வாங்கு வதற்கான விலைப்பட்டியல் பெறப்பட்டு, ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியாக சம்பந்தபட்ட குழுவின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு ஜெயசந்திரன், வேளாண்மை அலுவலரை (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு), ஈரோடு தொலைப்பேசி 9842370603 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.






