என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமத்திற்குள் புகுந்து"

    • ஒற்றை காட்டு யானை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • கால்நடை மருத்துவர்கள் மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் புலிகள் காப்பக த்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி என ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

    இவைகள் அடிக்கடி உணவுக்காகவும், தண்ணீரு க்காகவும் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது.

    இந்த நிலையில் சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனச்சரகத்தி ற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை நேற்று காலை 6 மணியளவில் அய்யம்

    பாளையம் கிராமத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாழை மரங்கள், சோளார் மின் வேலி, தண்ணீர் குழாய் பைப்புகளை சேதப்படுத்தியது.

    இதனை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க ப்பட்டு சுமார் 8 மணி நேரம் போராடி யானையை வனத்தி ற்குள் விரட்டி அடித்தனர்.

    அந்த ஒற்றை காட்டு யானை அய்யம்பாளையம் கிராம பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியையொட்டி முகாமிட்டுள்ளதால் மீண்டும் கிராம பகுதிக்குள் புகும் அபாயம் உள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்து அந்த ஒற்றை காட்டு யானை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனத்துறையினர் ஆனமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 2 கும்கி யானைகளை வைத்து மயக்க ஊசி செலுத்தி யானை பிடிப்பதற்கு நேற்று கபில் தேவ் என்ற கும்கி யானை லாரி மூலம் கொண்டு வரப்பட்டது.

    விளாமுண்டி வனச்சரக அலுவலக பகுதியில் கபில்தேவ் யானை நிறுத்தி வைத்து உள்ளனர். மேலும் முத்து என்ற கும்கி யானையும் இன்று வரவழைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை வனத் துறையினர் வனப்பகுதிக்குள் சென்றனர். அங்கு காட்டுயானை நடமாட்டம் கண்காணிக்க பட்டு வன கால்நடை மருத்துவர்கள் மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×