என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.50 ஆயிரம் பணம் பறித்த"
- 2 மர்ம நபர்கள் மூகமூடி அணிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.
- இதுகுறித்து அம்மா பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
ஈரோடு:
ஈரோடு அம்மாபேட்டை மாருதி நகரை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 65). இவர் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் ஆவார். இவரது மனைவி சாந்தி (55). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
மகள் திருமணமாகி பெங்களூரில் கணவருடன் வசித்து வருகிறார். மகன் மதுரை மாவட்டம் வத்தல குண்டில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். லெட்சுமணன் தற்காலிகமாக பள்ளி வாகனங்களில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சாந்தி அவரது மகனை பார்ப தற்காக வத்தலகுண்டிற்கு சென்றுள்ளார். லெட்சுமணன் மட்டும் தனியாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று லெட்சுமணன் சாப்பிட்டு விட்டு ஒரு அறையில் தூங்க சென்றார்.
அப்போது லுங்கி அணிந்த 2 மர்ம நபர்கள் மூகமூடி அணிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் ஒவ்வொரு அறையாக சென்று பணம், நகை ஏதே னும் உள்ளதா என சோதனையிட்டனர்.
இதையடுத்து லெட்சுமணன் தங்கியிருந்த அறைக்குள் சென்ற மர்ம நபர்கள் அவரை எழுப்பி மிரட்டியு ள்ளனர். பின்னர் லெட்சுமணன் அவரிடமிருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை அந்த மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
பின்னர் லெட்சுமணன் இதுகுறித்து அம்மா பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து மூகமூடி அணிந்து மிரட்டி பணம் பறித்த கொள்ளையர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.






