என் மலர்
நீங்கள் தேடியது "பெண்-வாலிபர்"
- விருதுநகர் மாவட்டத்தில் பெண், வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் வீரார்பட்டி பகுதியை சேர்ந்தவர் கன்னிதாய்(45). இவர் வீட்டுக்கு தெரியாமல் கடன் வாங்கி உள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோட்டூர் மலைப்பட்டி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தின் பின்புறம் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் பார்த்தசாரதி கொடுத்த புகாரின்பேரில் அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லபாண்டி(33). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்கு றைவு ஏற்பட் டது. மருத்து வம் பார்த்தும் குணமாக வில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி தங்கபாண்டி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






