என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 பவுன் திருட்டு"

    • இலக்கியா (40). இவர் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள அரசு அச்சகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • மாலையில் கல்லூரி முடிந்து மகள் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    சேலம்:

    சேலம் அய்யந்திருமாளிகை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி இலக்கியா (40). இவர் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள அரசு அச்சகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    வழக்கம் போல நேற்று வேலைக்கு சென்று விட்டார். இவரது மகளும், மகனும் வெளியில் சென்றிருந்தனர். மாலையில் கல்லூரி முடிந்து மகள் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து இலக்கியாவுக்கு மகள் தகவல் தெரிவித்தார். உடனே விரைந்து வந்த இலக்கியா சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வீடு புகுந்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ×