என் மலர்
நீங்கள் தேடியது "தண்டவாளத்தை கடக்க முயன்றார்"
- தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியாகுப்பம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புன்னியகோடி.
இவரது மகன் வெற்றிவேல் (வயது 34). இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துவிட்டு அப்பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வந்தார்.
நேற்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் ஆம்பூர் அருகே பச்சகுப்பம் ரெயில் நிலைய தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக பெங்களூரில் இருந்து தானாப்பூர் வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில் வெற்றி வேலுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாகவும், மேலும் வருகிற கார்த்திகை மாதம் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதாக இருந்ததும் தெரியவந்தது.






