என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைகளில் திடீர் ஆய்வு"

    • சேலம் மாவட்டம் பழைய பஸ் நிலையம் சிட்டு கோவில் தெரு, கல்லாங்குத்து மற்றும் சேலம் புதிய பஸ் நிலையம் வீரபாண்டியார் நகர் பகுதிகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • ஆய்வின் போது குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் எவரும் பணியமர்த்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.

    சேலம்:

    சென்னை முதன்மை செயலாளரும் தொழிலாளர் ஆணையாளருமான அதுல் ஆனந்த் அறிவுரைக்கிணங்க கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி மற்றும் சேலம், தொழிலாளர் இணை ஆணையர் புனிதவதி ஆகியோரின் உத்தரவின்பேரில் சேலம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம) கிருஷ்ணவேணி தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டு லைன் ஆகியோருடன் தொழிலாளர் துறை சார்ந்த தொழிலாளர் துணை ஆய்வாளர், 1ம் வட்டம், சேலம் மற்றும் சேலம் 1, 2, 3, 4, 5, 6ம் வட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், மேட்டூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் மற்றும் ஆத்தூர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகியோரால் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரினம் பருவத்தினர் (தடை செய்தல் மற்றும் ஒழுங்கு படுத்துதல்) சட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் பழைய பஸ் நிலையம் சிட்டு கோவில் தெரு, கல்லாங்குத்து மற்றும் சேலம் புதிய பஸ் நிலையம் வீரபாண்டியார் நகர் பகுதிகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த கூட்டாய்வின்போது மின்னணு மற்றும் மின்சாதனப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பழுது பார்க்கும் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் வளரிளம் பருவத்தினர் தொடர்பாக கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் எவரும் பணியமர்த்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.

    மேற்கண்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு நிறுவனத்திலும் பணியமர்த்த கூடாது என்றும் மற்றும் 14 வயதுக்கு மேல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை அபாயகரமான எந்தவொரு பணியிலும் அமர்த்துவது குற்றமாகும் என்றும், அவ்வாறு பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளர் மீது 6 மாத காலம் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டது.

    மேலும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 14 வயதுக்குட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமென்றும், குழந்தை தொழிலாளர்களை அனைத்து பணிகளிலும், வளரிளப் பருவத்தினரை அபாயகரமான பணிகளிலும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் www.pencil.gov.in இணையதளத்திலும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800 4252 650 மற்றும் 155214 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பொ.கிருஷ்ணவேணி தெரிவித்தார்.

    ×