என் மலர்
நீங்கள் தேடியது "தெருக்களில் சுற்றித்திரிந்த"
- நாய்களை பிடிக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
- பராமரிப்பின்றி தெருக்களில் சுற்றித்திரிந்த 30 நாய்களை பிடித்து சென்றனர்.
ஈரோடு:
கொடுமுடி பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று 12 பேரை கடித்து பதம்பார்த்தது. வெறிபி டித்து திரிந்த அந்த நாயின் ஆட்டம் அந்த பகுதியை ேசர்ந்த மக்களின் முயற்சியால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த நாயிடம் கடிபட்டவர்களில் பெரும்பாலான வர்கள் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கொடுமுடி பகுதியில் பராமரிப்பின்றி சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதன்பேரில் 5 பேர் கொண்ட நாய்களை பிடிக்கும் குழுவினர் மதுரையில் இருந்து கொடுமுடி அருகே அமைந்துள்ள சென்ன சமுத்திரம் பேரூராட்சிக்கு வந்தனர்.
அந்த குழுவினர் சென்ன சமுத்திரம் பேரூ ராட்சி, சா லைப்புதூர், வருந்தியாபா ளையம் உ ள்ளிட்ட பகு திகளில் பராமரிப்பின்றி தெருக்களில் சுற்றித்திரிந்த 30 நாய்களை பிடித்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து கொடுமுடியில் தெருநா ய்களை பிடிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.






