என் மலர்
நீங்கள் தேடியது "ரெயிலில் தீவிபத்து"
- தீவிபத்து குறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூருவில் உள்ள சங்கொல்லி ராயண்ணா ரெயில் நிலையத்திற்கு இன்று காலை 5.45 மணிக்கு உத்யன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. நின்று கொண்டிருந்த ரெயிலின் பி1 மற்றும் பி2 பெட்டிகளில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வரத்தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிபத்து குறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கிய 2 மணி நேரத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளதால் உயிர்சேதமோ, காயமோ இல்லை.
தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ரெயில் ஓட்டுநரின் சாதுரியமான செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ராமேஸ்வரத்துக்கு விரைவு ரெயில் புறப்பட்டது சென்றது.
புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த ராமேஸ்வரம் விரைவு ரெயில் புகை போக்கியில் தீ விபத்து ஏற்பட்டது. எஞ்சின் புகை போக்கியில் உள்ள டியூப் வெடித்ததால் பற்றி எரிந்த நெருப்பால் பயணிகள் பீதியில் உறைந்தனர்.
உடனடியாக விரைவு ரெயிலை நிறுத்தி சாதுரியமாக செயல்பட்ட ரெயில் ஓட்டுநரின் செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ராமேஸ்வரத்துக்கு விரைவு ரெயில் புறப்பட்டது சென்றது.






