என் மலர்
நீங்கள் தேடியது "சர்வதேச சர்பிங் லீக்"
- அனைத்து வயது பிரிவிலும் இந்தியா இறுதிச்சுற்று தகுதியை இழந்தது.
- அனைத்திலும் ஜப்பான் வீரர்கள் மட்டுமே இன்று வரை முன்னிலையில் இருந்தனர்.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்துகிறது. கடந்த 14ம் தேதி போட்டியின் இயக்குனர் டைராபர்ட் சோராட்டி போட்டியை துவக்கி வைத்தார்.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மாலத்தீவு உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து ஆண்கள்-பெண்கள் என 70 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 4வது நாளான இன்று முதல் முறையாக பெண்கள் அணியினர் களம் இறங்கி சாகசம் செய்தனர். அனைத்து வயது பிரிவிலும் இந்தியா இறுதிச்சுற்று தகுதியை இழந்தது. அனைத்திலும் ஜப்பான் வீரர்கள் மட்டுமே இன்று வரை முன்னிலையில் இருந்தனர். இறுதிச்சுற்றுக்கான தகுதியையும் பெற்றுள்ளனர்.
இப்போட்டிகள் நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது. கடற்கரை கோயில் வடபகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து போட்டியை பார்க்க பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஏதும் கிடையாது.
- காலிறுதி போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது.
- ஜப்பான் நாட்டு வீரர், வீராங்கனைகள் வென்று முதலிடத்தில் உள்ளனர்.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு இணைந்து சர்வதேச லீக் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்தி வருகிறது.
காலிறுதி போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது, அதில் ஜப்பான் நாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நாளை காலை கடலின் அலையைப் பொறுத்து குறிப்பிட்ட நேரத்தில் அரையிறுதிப் போட்டி தொடங்க உள்ளது.
இப்போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுமோமோ சாடா, கன நகாஷியோ, ஷினோ மட்சுடா, சாரா வாகிடா உள்ளிட்டோர் அரையிறுதிக்கு தேர்வாகி அலைச்சறுக்கு சாகசம் செய்ய உள்ளனர்.
தொடர்ந்து இறுதிச்சுற்றுடன் சர்வதேச லீக் போட்டி நாளை முடிகிறது. நாளை மறுநாள் பரிசுக்கோப்பை வழங்கப்படுகிறது.






