என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி - நாளை இறுதிச்சுற்றுடன் நிறைவு
- காலிறுதி போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது.
- ஜப்பான் நாட்டு வீரர், வீராங்கனைகள் வென்று முதலிடத்தில் உள்ளனர்.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு இணைந்து சர்வதேச லீக் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்தி வருகிறது.
காலிறுதி போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது, அதில் ஜப்பான் நாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நாளை காலை கடலின் அலையைப் பொறுத்து குறிப்பிட்ட நேரத்தில் அரையிறுதிப் போட்டி தொடங்க உள்ளது.
இப்போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுமோமோ சாடா, கன நகாஷியோ, ஷினோ மட்சுடா, சாரா வாகிடா உள்ளிட்டோர் அரையிறுதிக்கு தேர்வாகி அலைச்சறுக்கு சாகசம் செய்ய உள்ளனர்.
தொடர்ந்து இறுதிச்சுற்றுடன் சர்வதேச லீக் போட்டி நாளை முடிகிறது. நாளை மறுநாள் பரிசுக்கோப்பை வழங்கப்படுகிறது.
Next Story






