என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்தூர் ஊராட்சி"

    • கிராம சபா கூட்டம் பெருமாளப்பன் கோவில் வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமையில் நடைபெற்றது
    • கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தியிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், மத்தூர் ஊராட்சியில் 77 -ஆம் ஆண்டு கிராம சபா கூட்டம் பெருமாளப்பன் கோவில் வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தியிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

    கூட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கல்வித்துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழு பெண்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    இக்கூட்டத்தை மக்கள் நலப்பணியாளர் ராஜா ஒருங்கிணைத்து செய்திருந்தார்.கூட்டத்தி ற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் வெங்க டேசன் செய்திருந்தார்.

    ×