என் மலர்
நீங்கள் தேடியது "தின சிறப்பு முகாம்"
- தேசிய குட ற்புழு நீக்க தின சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.
- அல்பெண்டாசோல் மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு பயனடையு மாறு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு:
தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தலி ன்படி நாளை (வியாழக்கிழ மை) தேசிய குடற்புழு நீக்க தின முகாம் நடைபெற உள்ளது.
உலக மக்கள் தொகையில் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று 24 சதவீதமும் அதில் 25 சதவீதம் இந்தியா வில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நா ட்டில் குடற்புழு தொற்று பரவல் 25 சதவீதமாகவும் உள்ளது. குடற் புழு வகைக ளாக உருண்டைப்புழு, கொக்கி ப்புழு, சாட்டைப்புழு போன்றவை அறியப்படுகிறது.
குடற்புழு தொற்றால் பொதுவாக அறிகுறிகள் இருக்காது. ஆனால் கடுமை யாக தொற்று ஏற்பட்டு இருப்பின் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, பசியி ன்மை, பலவீனம் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த குடற்புழுக்கள் குடலில் இருந்து கொண்டு சாப்பிடு கின்ற உணவில் உள்ள இரும்புசத்து, ஊட்டச்சத்து, வைட்டமின் போன்ற சத்துக்களை எடுத்து கொண்டு வளர்கிறது.
இதனால் பாதிக்க ப்பட்டவர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு, ரத்த சோகை நோய், ஊட்டச்சத்து, விட்டமின் ஏ சத்து மற்றும் உடல் வளர்ச்சி குறைபாடு கள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கமாக தேசிய குடற் புழு நீக்க தினம் வருடத்தில் இருமுறை நடத்தப்படுகிறது.
இதனையொட்டி நடை பெறுகின்ற குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்களில் குடற்புழுவை அழிக்கும் பொருட்டு, அல்பெண்டா சோல் மாத்திரைகள் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200 மில்லி கிராம் அளவிலும், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 400 மில்லி கிராம் அளவிலும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு 400 மில்லி கிராம் அளவில் ஒரே தவணையில் வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை 2080 அங்கன்வாடி மையங்களில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், 375 துணை சுகாதார நிலையங்களிலும், அனை த்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்வி நிறுவன ங்களிலும் பயிலும் மாணவ ர்களுக்கும் அல்பெண்டா சோல் மாத்திரைகள் மொ த்தமாக 7,25,893 பயனாளி களுக்கு 2,112 பணியாளர்க ளை கொண்டு தேசிய குட ற்புழு நீக்க தின சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.
குடற்புழு தொற்றை தடுத்திட திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பது, கழிவறையை பயன்படுத்து வது, வெளியில் செல்லும் போது காலணிகளை அணிந்து செல்வது, சுற்றுப்பு றத்தை தூய்மையாக வைத்து க் கொள்வது, காய்கறி பழங்களை நன்றாக கழுவிய பின் உட்கொ ள்வது, சுகாதா ரமான குடிநீர், உணவை உட்கொள்வது, உணவுக்கு முன், கழிவறைக்கு சென்று விட்டு வந்த பின் கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற முறைகளை மேற்கொள்வது நல்லது.
மேலும் நாளை நடைபெற உள்ள குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்கள் தங்கள் பகுதிக்கு அருகில் நடைபெறும் இடங்களில் தங்கள் குழந்தைகளுக்கும் மாணவ, மாணவிகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களும் அல்பெ ண்டாசோல் மாத்திரை களை வாங்கி உட்கொண்டு பயனடையு மாறு கலெக்டர் ராஜ கோ பால் சுன்கரா கேட்டுக்கொ ண்டுள்ளார்.






