என் மலர்
நீங்கள் தேடியது "அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில்"
- அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபட்டனர்.
- திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், ஆஞ்சநேயர் கோயில் முன்பு மோட்ச தீபம் ஏற்றியும் வழிபாடு செய்தனர். அதேபோன்று ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர்.
பொதுமக்களுக்கு சுகாதார வசதிகளை ஊராட்சி சார்பாக செய்யப்பட்டு இருந்தது. ஆடி அமாவா சையை முன்னிட்டு அணைப் பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம் ஊராட்சி மாலப்பட்டி பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் கள்ளழகர் குதிரை வாகனத்தில் அமர்ந்து அலங்காரத்தில் காலை 4 மணிக்கு ஊர்வலம் தொடங்கி வான வேடிக்கையு டன் புறப்பட்டது.
பிள்ளை யார் நத்தம், கல்கோட்டை, செக்காபட்டி, சிறுநாயக்கன்பட்டி, சொக்கு பிள்ளை பட்டி, அணைப் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெருமாள் கள்ளழகர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இதனை வழிநெடுக பொதுமக்கள் வரவேற்று அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இவ்விழாவில் நிலக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






