என் மலர்
நீங்கள் தேடியது "மீண்டும் உப்பு தன்மை அதிகரிப்பு"
- ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது.
- உப்பு தன்மையும் அதிகரித்து விட்டது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வந்ததால் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதன்பேரில், அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவின் அளவு ஜீரோ டிஸ்சார்ஜாக இருக்கும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி பல வருடங்களாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது.
ஆனால் மழைக்காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து மழை நீரோடு சாக்கடை கழிவுகள் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
கடந்த மாதத்தில் மழை வெள்ள நீர் அதிகமாக வந்ததால் சாயக்கழிவுகளே இல்லாமல் சுத்தமான தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது உப்பு தன்மை 440 டி.டி.எஸ் என்ற அளவில் இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீடிக்க வில்லை. நேற்று காலை நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை 1520 டி.டி.எஸ்.சாக உயர்ந்துள்ளது.
தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலந்து நுங்கும், நுரையுமாக செல்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து ஆற்றங்கரையோர விவசாயிகள் கூறுகையில், நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.
ஆனால் திருப்பூர் பகுதி சாய ஆலை, சாயக்கடை கழிவுநீரால் மீண்டும் நொய்யல் ஆற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் செல்கிறது. உப்பு தன்மையும் அதிகரித்து விட்டது.
இனி இந்த தண்ணீரில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதே சிரமம் என்றனர்.






