என் மலர்
நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்கள் தர்ணா"
- 11 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்
- பேரூராட்சி தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்
கலவை:
கலவை பேரூராட்சியில் 11 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கீழ் தினசரி தெருவிற்கு சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்டுதோறும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு மூலம் தின கூலியாக ரூ.330 ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் விடப்பட்டு பணி செய்து வருகிறோம், ஆனால் எங்களுக்கு தினசரி கூலியாக ரூ.305 தருகின்றனர்.
போதிய சம்பளம் இல்லாததால் குடும்பம் வறுமையில் உள்ளது எனக் கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவல் அறிந்த அங்கு வந்த பேரூராட்சி தலைவர் கலா சதீஷ், தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்காமல் கால தாமதம் செய்து 10 நாட்களுக்கு பிறகே சம்பளம் வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
- இன்று காலை 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி:
பழனி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்காமல் கால தாமதம் செய்து 10 நாட்களுக்கு பிறகே சம்பளம் வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து இன்று காலை 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காமல் அவர்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பழனியில் கடந்த 2 நாட்களாகவே பக்தர்கள் வருகை அதிகரிப்பின் காரணமாகவும், தீபாவளி பண்டிகையின் போது வெடித்த பட்டாசு குப்பைகள் அதிக அளவில் தேங்கி சுகாதார சீர்கேடான நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடாமல் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சுகாதார பணிகளில் தேக்கம் ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களாகவே பழனியில் குப்பைகள் முறையாக அள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். நகரில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணத்தால் குப்பைகள் தேக்கமடைந்து காணப்பட்டால் பல்வேறு நோய்கள் உண்டாகும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே கவுன்சிலர் ஜனத்துல்பிரதோஷ் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இதே போல மற்ற கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






