என் மலர்
நீங்கள் தேடியது "பொன்விழா எழுச்சி மாநாடு"
- நாகர்கோவிலில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
- மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறுகிறது
நாகர்கோவில் :
மதுரையில் அ.தி.மு.க. சார்பில் எழுச்சி மாநாடு வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடந்தது.
கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம் வரவேற்று பேசினார்.
மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணதாஸ், இளைஞர் அணி இணை செயலாளர் சிவ செல்வராஜன், மேற்கு மாவட்ட அவை தலைவர் சிவ குற்றாலம், வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், துணைச் செயலாளர் சலாம், நிர்வாகிகள் மேரி கமலா பாய், பார்வதி அல்போன்சா, ஆர்.ஜே.கே.திலக், சில்வெஸ்டர், ஜெய கோபால், முருகேஸ்வரன், ஜெவின்விசு, கவுன்சிலர்கள் அக்சயா கண்ணன், கோபால் சுப்ரமணியம், சேகர், அனிலா சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, , அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், ராஜன் செல்லப்பா, இளை ஞர் பாசறை செயலாளர் பரமசிவம், அமைப்பு செயலாளர் பச்சைமால், மேற்கு மாவட்ட செய லாளர் ஜான் தங்கம் ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள்.
முடிவில் 11-வது வார்டு கவுன்சிலர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகே சன், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம்,பொன்சுந்தர்நாத், முன்னாள் நகர செயலாளர் கள் சந்திரன், சந்துரு மற்றும் வெங்கடேஷ் குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், குளச்சல் நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாணவர் அணி முன்னாள் மாவட்டச் செயலாளர் ரவீந்திரவர்சன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துகுமார், ஆனக்குழி சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்ட தற்கு வாழ்த்து தெரிவிப்பது,
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டில் குமரி மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் குடும்பத்தோடு பங்கு பெறுவதுடன் வருகிற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுத்தர பாடுபட வேண்டும்,
அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை அதிகளவு சேர்க்க வேண்டும்.
அ.தி.மு.க.வின் திட்ட ங்கள் மற்றும் சாதனை களை தெருமுனை பிரசா ரங்கள், திண்ணை பிரச்சா ரங்கள் மூலம் துண்டு பிரசு ரங்களாக வெளியிட்டு மக்க ளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
தக்காளி விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, அரிசி பற்றாக்குறை, மின் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப்பதிவில் முறைகேடு ஆகியவற்றுக்கு காரணமான தி.மு.க. அரசை கண்டிப்பது.
ஊழல் குற்றங்கள் செய்த வர்கள் யாராக இருந்தா லும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் ஊழல் செய்து மக்களை ஏமாற்றியவர் இலாகா இல்லாத நிலையில் ஜெயிலில் இருக்கும்போதும் அமைச்சர் பதவியை கொடுத்து போற்றி புகழ்கின்ற தமிழக முதல்-அமைச்சரை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






