என் மலர்
நீங்கள் தேடியது "300 பழச்செடிகள் தொகுப்பு ஒதுக்கீடு"
- பிச்சாண்டம்பாளையம் கிராமத்துக்கு 300 பழச்செடிகள் தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஒரு சில நாள்களில் மாடித்தோட்ட தொகுப்புகள் வழங்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு தோட்டக் கலை த்துறை உதவி இயக்குனர் வினோதினி கூறியதாவது:
கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள இந்த ஆண்டு (2023-2024) ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்துக்கு உள்பட்ட பிச்சாண்டம்பாளையம் கிராமம் தேர்வு செய்ய ப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் தோட்ட க்கலை துறையின் சார்பில் 80 சதவீத வளர்ச்சி திட்டப்பணிகளை முன்னுரிமை அடிப்படை யில் நிறைவேற்ற நடவடி க்கை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி பிச்சாண்டம் பாளையம் கிராமத்துக்கு வீடுகளின் பின்புறம் உள்ள காலி இடங்களில் பழச்செ டிகள் வளர்ப்பை மக்க ளிடையே ஊக்குவிக்கும் வகையில் மா, கொய்யா, எலுமிச்சை, மாதுளை, சப்போட்டா ஆகிய 5 பழச்செடிகளை கொண்ட தொகுப்பு வழங்கப்படுகிறது. ரூ. 200 மதிப்பிலான ஒரு தொகுப்புக்கு ரூ. 150 மானியம் ஆகும்.
பயனாளிகள் ரூ.50 மட்டும் செலுத்தி பெற்று க்கொள்ளலாம். இதனை பெற பயனாளிகள் தங்களது ஆதார், ரேஷன் அட்டை நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 675 பழச்செடிகள் தொகுப்பு வழங்கிட ஒதுக்கீடு செய்ய ப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பிச்சாண்டம்பாளையம் கிராமத்துக்கு 300 பழச்செடிகள் தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.
தவிர தோட்டக்கலைத் துறை சார்பில் தக்காளி, வெங்காயம் நாற்றுகள், நிலப்போர்வை அமைத்தல், தேனி பெட்டிகள் நிறுவுதல், மண்புழு உரக் கூடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் பிச்சாண்ட ம்பாளையம் கிராமத்தில் செயல்படுத்தப் படவுள்ளன.
மேலும் இக்கிராமத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு முகாமும் நடத்தப்பட்டு ள்ளது. இதில் இல்லத்தரசிகள் எவ்வாறு மாடித்தோட்டம் அமைப்பது, மாடித்தோட்டம் அமைக்க ஏற்ற இடங்கள், மாடித் தோட்டம் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து, மாடித் தோட்ட முன்னோடி விவசாயியான ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த கோமதி இல்லத்தரசிகளுக்கு பயிற்சியளித்தார்.
இப்பயிற்சியில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர். மேலும் மாடித்தோட்டம் அமைக்கத் தேவையான தொகுப்புகளை பெற ஆன்லைன் மூலமாகவும் விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு சில நாள்களில் மாடித் தோட்ட தொகுப்புகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






