என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா தொழில்முனைவோர்கள்"

    • சுற்றுலா தினத்தன்று விருது வழங்கப்பட உள்ளது.
    • அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது முக்கிய அறிவிப்பாகும்.

    அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்மந்தமான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா ஏற்பாட்டாளர்,

    உள்ளூர்-வெளியூர் சுற்றுலா வாகன ஏற்பா ட்டாளர், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளர், பயண, விமான பங்களிப்பாளர், தங்கும் விடுதி, உணவகம், வழிகாட்டி சாகச சுற்றுலா நிகழ்த்தியவர்,

    கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளர், சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவர், தமிழக சிறந்த விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பர கருத்து, சுற்றுலா, விருந்தோம்பல்,

    சுற்றுலா தொடர்பான கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுப வர்கள் மற்றும் நிறுவனங்க ளுக்கு உலக சுற்றுலா தினமான வருகின்ற செப்டம்பர் மாதம் 27-ந் தேதி விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணைய தளத்தின் வாயிலாக வரும் 15-ந் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கள்ளப்படுகிறது.

    மேலும் இதுதொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள மாவட்ட சுற்றுலா அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், 7-வது தளம் புதிய கட்டிடம், ஈரோடு மற்றும் தொலைபேசி எண்.0424-2253522, 7397715683 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    ×