என் மலர்
நீங்கள் தேடியது "கரும்பு தோட்டத்தில் தீ"
- ஆனந்தாயி (65). இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது.
- அந்த நிலத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார். இந்த நிலையில் திடீரென கரும்பு தோட்டத்தில் தீ பற்றியது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த போட்டிய புறம் சட்டூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தாயி (65). இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார். இந்த நிலையில் திடீரென கரும்பு தோட்டத்தில் தீ பற்றியது. ஆனந்தாயி வந்து பார்த்தபோது அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து. இதை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆனந்தாயி தீயை அணைக்க முயற்சி செய்தார். பின்னர் காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ராஜாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கரும்பு தோட்டம் முழுவதும் கருகி சேதமானது.






