என் மலர்
நீங்கள் தேடியது "10 லட்சம் பேர்"
- அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.
- பிரமாண்ட பந்தல்-மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்
மதுரை
அ.தி.மு.க. பொதுச் செய–லாளராக எடப்பாடி பழனி–சாமி தேர்வு செய்யப்பட்ட–தையடுத்து மதுரையில் பிரமாண்டமான வகையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு நடைபெறும் என்று முன் னாள் முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி அறிவித் தார்.
மேலும் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத் தும் என்றும், இந்த மாநாட் டில் குடும்பம், குடும்பமாக அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என் றும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு கொடுத்துள்ளார்.
அ.தி.மு.க. மாநாடு நடை பெற இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் அதற்கான பணிகள் மும்முரமாக நடை–பெற்று வருகின்றன. மதுரை வலையன்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலப்ப–ரப்பிலான மாநாட்டு திடல் சீரமைக்கப்பட்டு பந்தல் அமைக்கும் பணி தொடங்கி–யுள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக பந்தல் அமைக்கும் பணியில் ஈடு பட்டு வருகிறார்கள். மாநாட்டு மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டில் தமிழ–கம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநாட்டு திடலில் உணவு கூடம், குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய் யப்படுகின்றன. இந்த மாநாட்டையொட்டி பந்தல் அரங்கம், உணவு பரிமாறு–தல் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு குழுக்கள் அமைக் கப்பட்டு அந்த குழுவினர் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் மாநாட்டு மைதானத்தில் தினமும் ஆலோசித்து பணிகளை செய்து வருகிறார்கள்.
10 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாநாட்டு மைதானம் அருகே சுமார் 5 ஆயிரத்துக்கு மேற் பட்ட வாகனங்களை நிறுத் துவதற்கும் இடவசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாநாடு 20-ந்தேதி காலை 10 மணி அளவில் தொடங்குகிறது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்கள் புடைசூழ அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து மாநாட்டில் கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச் சிகள் நடைபெறுகின்றன. மாநாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழைப் பரப்பும் வகையில் கடந்த கால அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க கண்காட் சியும் புகைப்படங்கள், ஒலி, ஒளி காட்சிகளாக காட்டப்ப–டுகிறது.
மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனி–சாமி மாநாட்டை தலைமை தாங்கி நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் பாராளுமன்ற தேர் தல் பணிகள், கூட்டணி தொடர்பாகவும் முக்கிய அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார். நலிந்த தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த மாநாட்டில் தமி–ழகம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் ஒவ் வொரு மாவட்டம் வாரியாக தொண்டர்களை திரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக முன் னாள் அமைச்சர்கள் செல் லூர் ராஜூ, ஆர்.பி.உதய–குமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகி–யோர் ஒவ்வொரு மாவட் டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மதுரை மாநாட்டில் பங் கேற்க அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
மேலும் மாநாட்டு குழு–வில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, காமராஜ், விஜயபாஸ்கர், கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளும் மதுரையில் தங்கி இருந்து மாநாட்டு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள்.
மதுரை மாநாட்டில் பங் கேற்க வரும் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்க வசதியாக மதுரை மற்றும் சுற்றுப்ப–குதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், லாட்ஜூகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட் டுள்ளன. இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் ஓட்டல்கள் மற்றும் லாட்ஜூகள், திரு–மண மண்டபங்களில் முன் பதிவு செய்து வருகிறார்கள்.
இது தவிர மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங் களில் இருந்து அதிக அள–வில் தொண்டர்களை பங்கேற்க செய்யும் வகையில் தென் மாவட்ட நிர்வாகிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களில் இருந்து மட்டும் சுமார் 3 லட்சம் பேரை மாநாட்டு திடலுக்கு அழைத்து வர தேவையான வாகன வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பு அணி நிர்வா–கிகளும் பகுதி பகுதியாக சென்று தொண்டர்களிடம் அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க அழைப்பு கொடுத்து வருகிறார்கள். எனவே வருகிற 20-ந்தேதி மதுரை வலையங்குளம் மைதானம் நிரம்பி வழியும் வகையில் அனைத்து ஏற்பா–டுகளும் முழு வீச்சில் நடந்து வருவதாக அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் தெரிவித் தார்.
இந்த மாநாடு வருகிற பாராளுமன்றத் தேர்த–லுக்கும், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கும் அ.தி.மு.க.வின் மகத்தான வெற்றிக்கு அச்சாரமாக அமையும் என்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள் ளனர். இந்த மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர் களை அழைக்கவும் அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது.






