என் மலர்
நீங்கள் தேடியது "தெங்குமரஹாடா வனபகுதியில்"
- மழைப்பொழிவு குறைந்ததால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.
- 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரிசல் போக்குவரத்து தொடங்கியது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகு தியையொட்டி தெங்கு மரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம் பாளையம் ஆகிய வன கிராமங்கள் உள்ளன. இதில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட எல்லை யில் உள்ள இக்கிராம மக்கள் வனப்பகுதி வழியாக ஓடும் மாயாற்றை பரிசலில் கடந்து சென்ற பஸ்சில் ஏறி பவானிசாகர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளை யம், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இதேபோல் இப்பகுதியில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாண வர்களும் பரிசலில் சென்று தான் படித்து வருகின்றனர்.
மாயாற்றி ன் குறுக்கே பாலம் இல்லாததால் தெங்கு மரஹாடா, அல்லி மாயார், கல்ல ம்பாளையம், சித்திர ம்பட்டி கிராம மக்கள் பரிசலில் ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நி லையி ல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரி மாவட்டம் மலை ப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் போக்குவ ரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
இதனையடுத்து மழைப்பொழிவு குறைந்ததால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. மாயாற்றில் சாதாரண அளவுக்கு தண்ணீர் செல்வதால் 3 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் பரிசல் போக்குவரத்து தொடங்கியது.
இதனால் கிராம மக்கள், மாணவ- மாணவிகள் வழக்கம் போல் தங்களது பணிகளை மேற்கொ ண்டு வருகின்றனர். ஆனாலும் இது தற்காலிக மானது தான் என்றும்,
மீண்டும் மழை பெய்தால் மாயாற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்படும் என்றும், அதன் பின்னர் வழக்க ம்போல் பரிசல் இயக்க தடை விதிக்கப்ப டும்.
இதற்கு நிரந்தர தீர்வாக மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து ள்ள னர்.






