என் மலர்
நீங்கள் தேடியது "ஆேலாசனை"
- நடைபயண தொடக்க விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்தது.
- மாநில நிர்வாகிகளுடன் விழா ஏற்பாடுகள் குறித்து அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் இன்று மாலை ''என் மண் என் மக்கள்'' நடைப்பயணத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடங்க உள்ளார். இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
ராமேசுவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் திடலில் நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை அண்ணாமலை பார்வையிட வந்தார். அவரை நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் மோடி முனீசு வரன், கட்சியின் நகர் செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரன், பால்ராஜ் உள்பட நகர் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் மேடை பகுதி, தொண்டர்கள் அமரும் பகுதிகளில் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து மாநில நிர்வாகிகளுடன் விழா ஏற்பாடுகள் குறித்து அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.






