என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடைந்துள்ளது"

    • வேலூர் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட அனிச்சம்பாளையம் 18-வது வார்டில், 2ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் அப்பகுதி சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட அனிச்சம்பாளையம் 18-வது வார்டில், 2ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வேலூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து அனிச்சம் பாளையம் செல்லும் தார் சாலை, காவிரி ஆற்றின் நடுவே புகளூர் தடுப்பணை பணிகள் காரணமாக கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் அப்பகுதி சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது.இதனால் இந்த தார் சாலை முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. மேலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிபடுகிறார்கள்.தார் சாலை பழுதடைந்து புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் தார்சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×