என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுபான்மை பிரிவு"

    • பா.ம.க. சிறுபான்மை பிரிவு ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறுபான்மை பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ரா ஹிம் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு தலைவர் இமானுவேல் முன்னிலை வகித்தார்.

    மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் முகையதீன் சிறப்புரை யாற்றினார். ராமநாதபுரம் நகர செயலாளர் பாலகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் சை. அக்கிம் கலந்து கொண்டு பேசினார்.

    ஒன்றிய செயலாளர் பொறியாளர் ஷரீப் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். திருப்புல்லாணி பாமக ஒன்றிய செயலாளர் மக்தும்கான் தீர்மானம் நிறைவேற்றினார். ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் நன்றி உரை கூறினார்.

    ஆலோசனைக் கூட்ட த்தில் 20 ஆண்டுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய சிறை வாசி களை உடனடியாக விடுத லை செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்த மாதம் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    வருகின்ற ஜூலை 29-ந் தேதி திருநெல்வேலி மாவட்ட மாநாட்டிற்கு வருகை தரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசை வரவேற்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அனைத்து பொறுப்பா ளர்களும் சென்று கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    முன்னதாக சிறுபான்மை பிரிவின் மாநில தலைவராக பதவி ஏற்று முதல் முறை யாக ராமநாத புரத்திற்கு வருகை தந்த ஷேக் முகை யதீனுக்கு சிறு பான்மை பிரிவு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட தலைவர் இமானு வேல் ஆகியோர் பொன்னா டை அணிவித்து வரவேற்றனர்.

    ×