என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.13 கோடி தீர்வுத்தொகை"

    • சேலம் மாவட்டம் சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர், ஓமலூர் நீதி மன்றங்களில், நில எடுப்பு வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.
    • 8 அமர்வுகளில், 290 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர், ஓமலூர் நீதி மன்றங்களில், நில எடுப்பு வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. 8 அமர்வுகளில், 290 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 1986- ம் ஆண்டு சின்னகவுண்டர் என்பவரின் நிலத்தை, தமிழக வீட்டு வசதி வாரியம் எடுத்துக் கொண்ட வழக்கில் தீர்வு காணப்பட்டு, 37.64 லட்சம் ரூபாய் காசோலையை மாவட்ட நீதிபதி சுமதி வழங்கினார்.

    மேலும், 34 நில எடுப்பு வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 5.01 கோடி ரூபாய் வழங்கப்பட் டது. கடந்த 2021-ல் மோட்டார் வாகன விபத்து வழக்கில், தாய், தந்தை, தங்கையை இழந்த ஷோபனா என்பவர் தொடுத்த வழக்கில் ரூ.1.80 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 84 மோட் டார் வாகன விபத்து வழக்கு களுக்கு 6.43 கோடி ரூபாய் தீர்வு தொகை வழங்கப்பட்டது. மொத் தம் 149 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 13.78 கோடி ரூபாய் தீர்வுத்தொகை வழங்கப்பட்டது.

    ×