என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி கோபித்து சென்றதால்"

    • மனவேதனை அடைந்த கனகரத்தினம் வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் ஏ.பி.டி. சாலையை சேர்ந்தவர் கனகரத்தினம் (52). கூலி தொழிலாளி. கனகரத்தினம் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வந்ததால் அவரது மனைவி கலைச்செல்வி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டு விட்டு அவரது அம்மா வீட்டிற்கு கோபித்து சென்றார்.

    இதில் மனவேதனை அடைந்த கனகரத்தினம் வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்ப க்கத்தினர் கனகரத்தினத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகரத்தினம் உயிரிழந்தார்.

    பலியானார்

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×